பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.
சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!
ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்து அதனை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைக்கட்ட தொடங்கும்.
- Sathis S
- Updated on: Aug 7, 2026
- 4:01 pm IST
தமிழ்நாடு பட்ஜெட் 2026.. பொதுமக்கள் கூறுவது என்ன?
2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 05, 2026) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தொழில் மற்றும் மெட்ரோ திட்டங்கள் குறித்து எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
- Sathis S
- Updated on: Aug 6, 2026
- 1:00 am IST
ஆடிப்பெருக்கு விழா.. காவிரிக்கரையில் களைகட்டிய குலதெய்வ வழிபாடு!!
Salem Aadi Perukku Celebrations: தமிழ்நாட்டின் ஜீவநதியான காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு திருவிழா சேலம் மாவட்டத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பூலாம்பட்டி தடுப்பணைப் பகுதியில் கிராமங்களை உயிர்ப்பிக்கும் குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில், விவசாயிகள் நடத்திய சிறப்புப் பூஜைகளின் விவரங்கள் காணலாம்.
- Sathis S
- Updated on: Aug 3, 2026
- 1:31 pm IST
பள்ளி நிகழ்ச்சியில் கயிறு அறுந்து கீழே விழுந்த அமைச்சர் – நண்பர்களுடன் விளையாடியபோது விபத்து
சேலம் உடையாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளியில் 69ஆவது விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Sathis S
- Updated on: Aug 2, 2026
- 6:28 pm IST
சேலம் அரசு மருத்துவமனை மூன்றாவது மாடியில் புகுந்த பாம்பு.. நோயாளிகள் அதிர்ச்சி!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
- Sathis S
- Updated on: Jul 29, 2026
- 12:44 am IST
ISO தர சான்றிதழ் பெற்ற தமிழகத்தின் முதல் பள்ளி.. தொடர்ந்து சாதனைகளை புரிந்து வரும் அரசு பள்ளி!
தமிழகத்தில் முதல்முறையாக சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பள்ளி, தொடர்ந்து பல்வேறு சாதனை படைத்து வருகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் காரணமாக இந்த பள்ளிக்கு சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- Sathis S
- Updated on: Jul 29, 2026
- 3:36 pm IST
10 டன் மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம்.. கோட்டை மாரியம்மன் கோவிலில் தொடங்கியது ஆடிப் பண்டிகை!
சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் 10 டன் மலர்களுடன் விமரிசையாக நடைபெற்ற பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டிற்கான ஆடிப் பண்டிகை திருவிழா முறைப்படி தொடங்கியது. ஆடிப் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- Sathis S
- Updated on: Jul 22, 2026
- 2:44 pm IST
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மலைவாழ் கிராம மாணவி.. குவியும் பாராட்டு!
ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து முதல்முறையாக நீட் தேர்வில் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்பதுதான் தன்னுடை ஆசை என்று தேர்ச்சி பெற்ற அந்த மாணவி கூறியுள்ளார். அவரின் கனவை நிறைவேற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- Sathis S
- Updated on: Jul 22, 2026
- 12:39 am IST
தனியாக வசித்து வந்த முதிய தம்பதி அடித்துக் கொலை.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனியாக வசித்து வந்த முதிய தம்பதி தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Sathis S
- Updated on: Jul 22, 2026
- 12:32 am IST
1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும்.. அமைச்சர் மதன்ராஜ் பேச்சு!
தமிழ்நாட்டை 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது" என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
- Sathis S
- Updated on: Jul 29, 2026
- 3:57 pm IST
“எடப்பாடியின் எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்!”.. அமைச்சர் அருண்ராஜ் பரபர பேச்சு!!
TVK Salem Mega Event: சேலம் சீலநாயக்கன்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். விழாவில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், எடப்பாடியின் எஃகு கோட்டையான சேலத்தில் தவெக ஓட்டை போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.
- Sathis S
- Updated on: Jul 20, 2026
- 11:45 am IST
2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த தந்தை – மனைவியின் வீட்டில் நடந்த சோகம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமியார் வீட்டில் இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் விபரீத முடிவெடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
- Sathis S
- Updated on: Jul 14, 2026
- 1:28 pm IST