ஆடிப்பெருக்கு விழா.. காவிரிக்கரையில் களைகட்டிய குலதெய்வ வழிபாடு!!
Salem Aadi Perukku Celebrations: தமிழ்நாட்டின் ஜீவநதியான காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு திருவிழா சேலம் மாவட்டத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பூலாம்பட்டி தடுப்பணைப் பகுதியில் கிராமங்களை உயிர்ப்பிக்கும் குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில், விவசாயிகள் நடத்திய சிறப்புப் பூஜைகளின் விவரங்கள் காணலாம்.
சேலம், ஆக.03: தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகவும், பாசன நதியாகவும் திகழும் வற்றாத ஜீவநதியான காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆடி மாதம் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் “ஆடிப்பெருக்கு விழா” சேலம் மாவட்டத்தில் வழக்கமான கலாச்சார உற்சாகத்தோடும் கோலாகலத்தோடும் கொண்டாடப்பட்டது. காவிரிக் கரையோர கிராமங்களை உயிர்ப்பிக்கும் வகையில் பக்தர்கள் தங்களின் குலதெய்வ வழிபாட்டை விமரிசையாக நடத்தினர்.
Follow Us
Latest Videos
