நிரம்பியது பில்லூர் அணை.. பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நடப்பாண்டில் முதன்முறையாக 97 அடியை எட்டி நிரம்பியது. இதனால் பவானி ஆற்றில் 8,060 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், ஆக.02: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் மிக முக்கியக் குடிநீர் ஆதாரமாகத் திகழ்ந்து வரும் பில்லூர் அணை, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடப்பாண்டில் முதன்முறையாகத் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பைக் கருதி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow Us
