AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் கனமழை – வானில் வட்டமடிக்கும் 6 விமானங்கள் – தரையிறங்க முடியாததால் பரபரப்பு

சென்னையில் ஆகஸ்ட 9, 2026 இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கனமழையால் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரும் சென்னை விமான நிலையத்திற்கு வர முடியாமல் தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

சென்னையில் கனமழை – வானில் வட்டமடிக்கும் 6 விமானங்கள் – தரையிறங்க முடியாததால் பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Aug 2026 17:45 PM IST

சென்னை, ஆகஸ்ட் 9 : சென்னையில் ஆகஸ்ட 9, 2026 இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கனமழையால் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. அந்தமான், டெல்லி, கோவா, ஹைதராபாத், திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானங்கள் சூரைக்காற்றுடன் கூடிய மழையால் தரை இறங்க முடியாமல் தாமதமாகியுள்ளன.

தாம்பரத்தில் தரையிறங்கிய அமித்ஷா ஹெலிகாப்டர்

சென்னையில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரும் சென்னை விமான நிலையத்திற்கு வர முடியாமல் தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : “விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!

2 நாள் பயணமாக தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8, 2026 நேற்று திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் ஆகஸ்ட் 9, 2026 இன்று கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு புதுவை காவல்துறைக்கு ‘ஜனாதிபதியின் வண்ணக்கொடி’ விருதை வழங்கினார்.

வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 9, 2026 இன்று பிற்பகல் முதலே கனமழை பெய்து வருகிறது. அதன்படி, வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : “கோயிலுக்கு வருவது மன அமைதிக்காகத்தான்!”.. செப்.1 முதல் செல்போன்களுக்கு தடை.. ஸ்டிரிக்ட்டாக சொன்ன அமைச்சர் ரமேஷ்!!

இதற்கிடையில் தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெயில் தாக்கம் காரணங்களால், ஆகஸ்ட் 10, 2026 நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Follow Us