AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“பாஜகவின் முதன்மை எதிரி தவெக தான்!”.. திமுக ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் வித்தியாசமில்லை.. நயினார் நாகேந்திரன் சாடல்!

தமிழகத்தில் பாஜகவுக்கு இனி முதன்மை எதிரி தமிழக வெற்றிக் கழகம்தான் (தவெக) என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

“பாஜகவின் முதன்மை எதிரி தவெக தான்!”.. திமுக ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் வித்தியாசமில்லை.. நயினார் நாகேந்திரன் சாடல்!
நயினார் நாகேந்திரன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 01 Aug 2026 13:53 PM IST

சென்னை, ஆகஸ்ட் 01: தமிழகத்தில் மாறிவரும் அரசியல் சூழலில், பாரதிய ஜனதா கட்சியின் முதன்மை அரசியல் எதிரியாகத் தமிழக வெற்றிக் கழகமே உருவெடுத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக அறிவித்துள்ளார். புதிய தலைமுறை செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டியில், தவெக அரசின் 77 நாள் ஆட்சிக் காலம் குறித்தும், மாநிலத்தின் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்தும் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையும் படிக்க: ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு.. உட்கட்சிப் பூசலால் திமுக தலைமை அதிரடி நடவடிக்கை!

“திமுகவில் இருந்து தவெகவை நோக்கி!”

தமிழகப் பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பாஜகவின் அரசியல் எதிரி யார் என்பது குறித்த முக்கிய விளக்கத்தை நயினார் நாகேந்திரன் இந்தப் பேட்டியில் வெளிப்படுத்தினார். முந்தைய ஆட்சிக் காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) எதிராகப் பாஜக தொடர்ச்சியான அரசியல் வியூகங்களை வகுத்துச் செயல்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள தவெகவை மையப்படுத்தியே பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றார்.

மக்கள் விரோத ஆட்சி என்ற குற்றச்சாட்டு:

“இன்றைய சூழலில் மக்களுக்கு எதிராகச் செயல்படும் முதன்மை சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகமே பார்க்கப்படுகிறது. எனவே, பாஜகவின் அரசியல் எதிர்ப்புக் கணை இனி தவெகவை நோக்கியே பாயும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்:

தவெக அரசு அமைந்த குறுகிய காலத்திலேயே சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக நயினார் நாகேந்திரன் சாடினார். கடந்த 77 நாட்களாகத் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. காவல்துறையால் சுதந்திரமாகச் செயல்பட முடியாத அளவுக்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

போதைப்பொருள் மற்றும் குற்றச் சம்பவங்கள்:

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கற்பழிப்புச் சம்பவங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாக அவர் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

திமுக, தவெக ஆட்சிக்கு வித்தியாசமில்லை:

முந்தைய திமுக ஆட்சியில் என்னென்ன நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் நிலவினவோ, அதே நிலைமைதான் தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்கிறது என்றும், ஆட்சிகள் மாறினாலும் மக்கள் சந்திக்கும் துயரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் விமர்சித்தார்.

Follow Us