சேலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது!
Salem Gang Harassing : சேலம் மாவட்டத்தில் 9- ஆம் வகுப்பு படித்த சிறுமியை பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அழைத்து 7 கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் இரு சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். தற்போது, வீட்டில் இருந்து வரும் அந்த சிறுமிக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஒரு ஆண் நண்பர் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன் அடிப்படையில், அந்த சிறுமியும் தனது ஆண் நண்பர்களுக்கு சென்றுள்ளார். இந்த பிறந்த நாள் விழாவில் ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகள் சிலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விழாவின்போது, ஆண் நண்பர்கள் அனைவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளனர். இதில், போதை தலைக்கேறிய நிலையில், இந்த சிறுமியை 7 ஆண் நண்பர்கள் இணைந்து பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு, சிறுமியின் நிலையை பார்த்து அவரது தாய் கேட்டுள்ளார். அப்போது, நடந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு, சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சொத்து குவிப்பு வழக்கு.. முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




வக்கிர சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர்
இதில், சிறுமியின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த ஆண் நண்பர்கள் குறித்த விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் ( 21 வயது), ஆகாஷ் ( 19 வயது) மற்றும் 13, 17 வயதுடைய சிறுவர்கள் உட்பட 7 பேர் என தெரியவந்தது.
4 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்
அதன்படி, பாலமுருகன், ஆகாஷ் உள்பட இரு சிறுவர்களை என மொத்தம் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சி.. போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொடூர கொலை.. மையம் நிர்வாகி உள்பட 5 பேர் அதிரடி கைது!