AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ZIM: அயர்லாந்து அணிக்கு எதிரான தோல்வி.. நினைவு கூர்ந்து கவலைப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்!

Shreyas Iyer Statement: ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு (IND vs ZIM) எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய அணி விரைவில் வெற்றிப் பாதைக்குத் திரும்பும். இங்கிலாந்தில் தங்கள் அணிக்குக் கடினமான சூழல் நிலவியது.

IND vs ZIM: அயர்லாந்து அணிக்கு எதிரான தோல்வி.. நினைவு கூர்ந்து கவலைப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்!
ஷ்ரேயாஸ் ஐயர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Jul 2026 20:52 PM IST

2026 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி (Indian Cricket Team) ஒரு டி20 தொடரைக் கூட வென்றதில்லை. உலக சாம்பியனான இந்தியா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திடம் டி20 தொடர்களில் ஒயிட்வாஷ் ஆனது. இதைத் தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு (IND vs ZIM) எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய அணி விரைவில் வெற்றிப் பாதைக்குத் திரும்பும். இங்கிலாந்தில் தங்கள் அணிக்குக் கடினமான சூழல் நிலவியது. அணி எவ்வளவு விரைவில் சூழ்நிலைகளுக்குப் பழகிக்கொள்கிறதோ, அவ்வளவு விரைவில் வெற்றிகள் வரத் தொடங்கும். அயர்லாந்தில் தங்களால் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றும், அதனால்தான் தோல்வியைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

ALSO READ: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. அதிரடி அணியை அறிவித்த ஜிம்பாப்வே..!

தோல்வி குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்:

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக, இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது, “இங்கிலாந்தில் நாங்கள் நிச்சயமாக ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டோம். இருப்பினும், அதிலிருந்து சில நல்ல விஷயங்களும் கிடைத்தன. களத்தில் இறங்கியவுடன் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது எப்படி என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகிறது. இந்த அணியில் உள்ள சிலர் முதல் முறையாக விளையாடுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், கூடிய விரைவில் நம்மை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது நல்லது. அப்போதுதான் நமக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், “முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. இனிவரும் போட்டிகளில், குறிப்பாக ஜிம்பாப்வேக்கு எதிராக, ஒரு அணியாக நாங்கள் எப்படி விளையாடப் போகிறோம் என்பது பற்றி அனைவரும் அதிகம் விவாதித்து வருகின்றனர். நாங்கள் கூடிய விரைவில் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அயர்லாந்திலும் எங்களுக்கு இதேதான் நடந்தது. நாங்கள் யதார்த்தத்தை உணர்ந்தோம். எனவே, இங்கு நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தவறுகளைச் சரிசெய்வோம். முடிவுகள் நிச்சயமாக எங்களுக்குச் சாதகமாகவே இருக்கும்”என்றார்.

ALSO READ: ஒரு புள்ளியில் முதலிடத்தை மிஸ் செய்த கில்.. வெளியான ஐசிசி ஒருநாள் தரவரிசை!

இளம் வீரர்கள் மீது ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை:

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு வீரர்களுக்குப் பயிற்சி செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “அனைத்து இளம் வீரர்களும் பயிற்சி செய்துள்ளனர். டி20 தொடருக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. அவர்கள் முன்பு செய்த தவறுகளை நிச்சயம் சரிசெய்திருப்பார்கள். கடந்த தொடரிலிருந்து, தாங்கள் எதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை அவர்கள் கற்றிருப்பார்கள்.” என்றார்.

Follow Us