Team India: காயத்தில் இருக்கும் கில், பும்ரா.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார்களா?
IND vs SL Test Series: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே கில் மற்றும் பும்ரா உடற்தகுதி பெற்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் பும்ராவைத் தவிர, சாய் சுதர்ஷனின் உடற்தகுதி குறித்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி (Indian Cricket Team) வருகின்ற 2026 ஆகஸ்ட் 4ம் தேதி 2 டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக இலங்கைக்குப் புறப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் காயங்கள் குறித்த ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு வீரர்களும் குணமடைந்து வரும் நிலையில், இருவரும் படிப்படியாக உடற்தகுதி பெற்று வருகின்றனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இருவரும் உடற்தகுதி பெற்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் பும்ராவைத் தவிர, சாய் சுதர்ஷனின் உடற்தகுதி குறித்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கிடைத்த தகவலின்படி, சாய் சுதர்சன் வருகின்ற 2026 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பேட்டிங் செய்யத் தொடங்குவார்.
ALSO READ: டி20 முதல் டெஸ்ட் வரை.. டாப் 10 தரவரிசையில் இருக்கும் இந்திய வீரர்கள் பட்டியல்!
பும்ராவிற்கு என்ன ஆனது..?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்தார். அவரது முழங்கால் வீங்கியுள்ளது. லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது பும்ராவுக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின்படி, காலியில் வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கும் முதல் இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டிக்கு பும்ரா தயாராகிவிடுவார். உடற்தகுதியின் அடிப்படையில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பும்ரா படிப்படியாக தனது பந்துவீச்சுப் பணிச்சுமையை அதிகரிக்கத் தொடங்குவார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் இருக்கிறார். பும்ரா 2026 ஜூலை கடைசி வாரமான இந்த வாரம் பந்துவீச்சுப் பயிற்சியைத் தொடங்கிவிட்டதாகவும், படிப்படியாக தனது பந்துவீச்சு வேகத்தை அதிகரிப்பார் என்றும் தெரிகிறது.




கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் கில்:
கிடைத்த தகவல்களின்படி, கழுத்துப் பிரச்சனையால் அவதிப்படும் கேப்டன் சுப்மன் கில்லுக்கு, பிசிசிஐ மருத்துவக் குழு வெளி சிறப்பு மருத்துவரின் உதவியை நாடி வருகிறது. கில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. அப்போதுதான் கில்லுக்கு முதல் முறையாக இந்தக் காயம் ஏற்பட்டது. தனது கழுத்துப் பிரச்சனை காரணமாக, கில் ஐபிஎல் தொடரின் சில போட்டிகளிலும் சிக்கல்களை எதிர்கொண்டார்.
தீவிரமாக கண்காணிக்கும் மருத்துவக் குழு:
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் (WTC) கண்ணோட்டத்தில், இலங்கை சுற்றுப்பயணம் இந்தியாவிற்கு முக்கியமானது. கில் மற்றும் பும்ரா இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகிறது. இந்த இருவரால் அணியின் பலம் குறைவதை பிசிசிஐ விரும்பவில்லை. பிசிசிஐ மருத்துவக் குழு பும்ராவைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கில்லுக்காக வெளி நிபுணர்களின் உதவி நாடப்படுகிறது.
ALSO READ: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரஹானே.. உணர்ச்சிப்பூர்வமான பதிவு!
கில் மற்றும் பும்ராவைத் தவிர, சாய் சுதர்ஷன் குறித்தும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. தொடைத்தசை காயத்திலிருந்து குணமடைந்த சாய் சுதர்சன், 2026 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் பேட்டிங் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்.