AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Monsoon Eye Care: மழைக்காலத்தில் கண் தொற்று பாதிப்பா..? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

Eye Infection: மழைக்காலத்தில் ஸ்டைஸ் பொதுவாக பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது. பெரும்பாலும், இது ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த தொற்று கண் இமைகளின் அடிப்பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அல்லது சுற்றியுள்ள மயிர்க்கால்களில் ஏற்படுகிறது. இது ஒரு பொதுவான தொற்று என்றாலும், இது மிகவும் வேதனையான ஒன்று.

Monsoon Eye Care: மழைக்காலத்தில் கண் தொற்று பாதிப்பா..? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
கண் தொற்று பாதிப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Nov 2025 19:38 PM IST

மழைக்காலம் (Rainy Season) வந்ததும் குளிர்ச்சியுடன் பல தொற்று நோய்களும் நம்மை ஆக்கிரமிக்க தொடங்கும். இதில், நம் உடலில் அடிக்கடி பாதிக்கப்படுவது கண்கள்தான். கண் தொற்று (Eye Infection) ஏற்படும்போது, ​​அதன் வலியை நம்மால் தாங்கக்கூட முடியாது. கண்கள் பாதிக்கப்படும்போது, அது சிவந்து வீங்கிவிடும். இதனால், எந்த வேலையும் செய்வது கடினம். கண் இமையின் அடிப்பகுதியில் சிவப்பு நிற வீக்கம் ஏற்படும்போது, இது வலிமிகுந்ததாக இருக்கும், சில நேரங்களில் கண்களில் இருந்து அதிகப்படியான பூலை மற்றும் நீர் வெளியேறும். மருத்துவ ரீதியாக, இது ஒரு ஸ்டை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவான தொற்று என்றாலும், இது மிகவும் வேதனையான ஒன்று.

மழைக்காலத்தில் ஸ்டைஸ் பொதுவாக பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது. பெரும்பாலும், இது ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த தொற்று கண் இமைகளின் அடிப்பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அல்லது சுற்றியுள்ள மயிர்க்கால்களில் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை பெரும்பாலும் அழுக்கு கைகளால் கண்களைத் தொடுவது அல்லது தேய்ப்பது, பழைய அல்லது அசுத்தமான கண் ஒப்பனை பொருட்களைப் பயன்படுத்துவது, அசுத்தமான காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது, கண்களில் தூசி அல்லது கிருமிகள் படிதல், நீரிழிவு நோய் அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றால் ஸ்டைஸ் ஏற்படலாம்.

ALSO READ: மழையால் தேங்கிய நீர் பாதத்தில் வெடிப்பை தரும்.. வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?

கண்களில் தொற்று ஏற்பட்டால் சரிசெய்ய என்ன செய்யலாம்?

ஹாட் பேக் பயன்படுத்தல்:

வெதுவெதுப்பான நீரில் நனைத்த சுத்தமான துணியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் 3-4 முறை சூடாக ஒத்தனம் கொடுப்பது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது விரைவில் வலியைக் குறைக்கும். மேலும்,  பூலை வேகமாக வெளியேற உதவும்.

கண்களைச் சுத்தமாக வைத்திருத்தல்:

கண்களைச் சுற்றியுள்ள பகுதியை லேசான உப்பு நீர் அல்லது கிருமி நாசினிகள் கொண்ட துடைப்பான்களால் சுத்தமாக வைத்திருங்கள்.

வலியைக் குறைக்க பாராசிட்டமால்:

கண்களில் கடுமையான வலி ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபனை எடுத்துக் கொள்ளலாம்.

மேக் அப் போடுவதை நிறுத்துங்கள்:

கண் இமைகளில் பிரச்சனை ஏற்பட்டால், அவை முழுமையாக குணமாகும் வரை நீங்கள் எந்த வகையான கண் தொடர்பான மேக் அப்பையும் பயன்படுத்தக்கூடாது.

என்ன செய்யக்கூடாது..?

  • கண்களில் வலி அதிகரிக்கும்போது, தங்கள் கைகளால் கண்களில் அழுத்தம் கொடுக்கிறார்கள். இது கிருமிகளை மேலும் பரப்ப செய்து, தொற்றுநோயை அதிகரிக்கும்.
  • கண்களை வெறும் கைகளால் தேய்ப்பதோ அல்லது அழுத்துவதோ தொற்றுநோயை மேலும் பரப்பக்கூடும்.
  • கண்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீரும் வரை காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவதை நிறுத்த வேண்டும்.

ALSO READ: மழைக்காலத்தில் வீட்டை இப்படி பாரமரிங்க.. எதிர்கால சிக்கலை தடுக்கலாம்!

கொஞ்சம் விழிப்புணர்வு மற்றும் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதில் தவிர்க்கலாம். வலி அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் நீங்காமலோ இருந்தால், ஒரு கண் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Follow Us