AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Glasses Mark Removal: கண்ணாடி அணிவதால் சரும தோற்றத்தில் தொய்வா? மூக்கின் கரும்புள்ளிகளை இப்படி அசால்ட்டாக போக்கலாம்!

Remove Glasses Marks: கண்ணாடி அணிவதால் மூக்கின் இருபுறமும் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை எளிதாக நீக்க 5 இயற்கை வழிமுறைகளை இந்த கட்டுரை விளக்குகிறது. வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, கற்றாழை ஜெல், தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்/வைட்டமின் ஈ கலவை போன்றவற்றை பயன்படுத்தி இதை எவ்வாறு செய்வது என்பதை விளக்குகிறது.

Glasses Mark Removal: கண்ணாடி அணிவதால் சரும தோற்றத்தில் தொய்வா? மூக்கின் கரும்புள்ளிகளை இப்படி அசால்ட்டாக போக்கலாம்!
கண்ணாடி அணிந்த அடையாளங்கள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Sep 2025 17:31 PM IST

ஒரு காலத்தில் வழக்கமான செயல்களால் 50 வயதிற்கு பிறகுதான் மக்களின் பார்வை பலவீனமடைந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் பணிச்சுமை (Workload) மற்றும் திரை நேரம் காரணமாக, மக்களின் பார்வை பலவீனமடைந்து வருகிறது. இதனால், சிறியவர்கள் கூட கண்ணாடி அணிய தொடங்கியுள்ளனர். தொடர்ந்து கண்ணாடி அணிவது கண்களுக்கு (Glasses Marks) நிவாரணம் அளித்தாலும், அதை அணிவதன் மூலம் சருமத்தில் சில தழும்புகளை விட்டு செல்கிறது. இந்த தழும்புகளை நீக்க கடைகள் மற்றும் ஆன்லைன்களில் பல கிரீம்கள் கிடைக்கின்றன. ஆனால், இவை எந்த விளைவையும் கொடுக்காது. ஒருவர் தொடர்ந்து கண்ணாடி அணிந்தால், மூக்கின் இருபுறமும் அடர்த்தியான மற்றும் கருமையான புள்ளிகள் தோன்றும்.

இதுபோன்ற சூழ்நிலையில், முகத்தில் உள்ள கண்ணாடித் தழும்புகளை முற்றிலுமாக அகற்றக்கூடிய சில தீர்வுகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இதற்காக, நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை அல்லது கடினமாக உழைக்க வேண்டியதில்லை.

ALSO READ: சர்க்கரை சாப்பிட்டால் முடி சீக்கிரம் நரைக்குமா..? இது உண்மைதானா..?

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் சருமத்திற்கு பல நன்மைகள் தரும். அதன்படி, தினமும் கண்ணாடி அணிபவர்களுக்கு மூக்கின் இருபுறமும் கருமை நிற புள்ளிகள் ஏற்படும். இந்த நேரத்தில், வெள்ளரிக்காய் சாற்றைப் அந்தப் பகுதியில் தடவினால் படிப்படியாகக் கரும்புள்ளிகள் குறைய தொடங்கும்.

உருளைக்கிழங்கு:

முதலில் உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் அரைத்து, சாற்றை பிரித்தெடுத்து, அந்த சாற்றை மூக்கின் இருபுறமும் தடவவும். இந்த சாற்றை பத்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் கழுவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மெல்ல மெல்ல மறைய தொடங்கும்.

கற்றாழை ஜெல்:

கற்றாழை சருமத்தை குணப்படுத்த உதவும் இனிமையான மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. தொடர்ந்து கண்ணாடி அணிவதால் மூக்கின் இருபுறமும் தோன்றும் புள்ளிகளை நீக்குவதில் கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, கறை படிந்த இடத்தில் சிறிது ஃப்ரஸான கற்றாழை ஜெல்லைப் பூசினால் கறை மறைந்துவிடும்.

தேன்:

தேன் எந்த விதமான கறைகளையும் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவருக்கு கண்ணாடி அணிவதால் மூக்கின் இருபுறமும் அடர்த்தியான புள்ளிகள் இருந்தால், தேனைப் பயன்படுத்துங்கள். பின்னர் புள்ளிகள் படிப்படியாகக் குறையும்.

ALSO READ: இளம் வயதிலேயே வயதான தோற்றமா..? சருமத்தை இறுக செய்யும் சிறப்பான டிப்ஸ்!

தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ:

வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் கிடைக்கும். அதனுடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்க்கவும். இரண்டையும் நன்றாகக் கலந்த பிறகு, முகத்தில் உள்ள தழும்புகளில் தடவி, லேசாக மசாஜ் செய்யவும். இதை, தினமும் தூங்குவதற்கு முன் முயற்சி செய்யுங்கள், சில நாட்களில் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்.

Follow Us