AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளின் முன் சண்டைபோடும் பெற்றோரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து!

Parenting Alert: கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் தொடர்ச்சியாக பெற்றோர் சண்டைபோட்டோல் அது அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் பெற்றோர்கள் தொடர்ந்து சண்டையிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பார்க்கலாம்.

குழந்தைகளின் முன் சண்டைபோடும் பெற்றோரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Jul 2025 21:40 PM IST

எல்லா வீடுகளிலும் சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதது. குறிப்பாக கணவன் மனைவி இடையே மோதல்கள் ஏற்படுவது சகஜம். கருத்து வேறுபாடுகளால் எழும் மோதல்கள் வரம்பு மீறினால், வீட்டின் சூழ்நிலை மோசமடையும். அது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தையின் மனம் மிகவும் மென்மையானது. அதனால் பெற்றோர் சண்டையிட்டால், குழந்தைகளை மனதளவில் பாதிக்கும். அது அவர்களின் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோருக்கு இடையேயான மோதல்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பெற்றோரின் சண்டைகள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன?

மன அழுத்தத்தை உருவாக்கும்

குழந்தைகள் மிகவும் மென்மையான மனம் படைத்தவர்கள். ஒவ்வொரு முறையும் பெற்றோர் சண்டையிடும்போது அவர்கள் மிகுந்த வலியை அனுபவிக்கிறார்கள். குழந்தைகள் அத்தகைய சூழலில் வளர்ந்தால், அது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். தொடர்ந்து பதட்டம், சோகம் மற்றும் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பெற்றோர் மீது கோபம்

குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் மீண்டும் மீண்டும் சண்டையிடுவதைப் பார்க்கும்போது, அவர்கள் தங்கள் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவர் மீதும் கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் தான் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது அவர்களின் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் பலவீனப்படுத்துகிறது.

மன ஆரோக்கியம் பாதிக்கும்

தொடர்ச்சியான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. பெற்றோரின் சண்டைகளைப் பார்த்த பிறகு குழந்தைகளின் தன்னம்பிக்கை பலவீனமடைகிறது.

தன்னம்பிக்கை மீதான தாக்கம்

பெற்றோர்களிடையே அடிக்கடி ஏற்படும் சண்டைகள் குழந்தைகளில் பாதுகாப்பின்மை மற்றும் குற்ற உணர்ச்சிக்கு வழிவகுக்கும். இது பின்னர் அவர்களின் சுயமரியாதையை சேதப்படுத்தும். இது அவர்களின் தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது.

மோசமான நடத்தை

குழந்தைகள் தாங்கள் பார்ப்பதிலிருந்துதான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர் சண்டையிடுவதைப் பார்த்தால், அவர்கள் சத்தமாகப் பேசி வாக்குவாதம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் அபாயம் உள்ளது. இது எதிர்காலத்தில் அவர்களின் உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெற்றோர்கள் பிரச்சினைகளை அமைதியாகத் தீர்ப்பதைக் காண்பதற்குப் பதிலாக, அவர்கள் எப்போதும் சண்டையிடுவதைப் குழந்தைகள் பார்த்தால், அவர்களும் கோபமடைந்து அதே வழியில் சண்டையிடுவார்கள். அதை நேர்மறையான வழியில் எவ்வாறு தீர்ப்பது என்று அவர்களுக்கு ஒருபோதும் தெரியாது.

கல்வி – ஆரோக்கியத்தில் தாக்கம்

வீட்டில் பெற்றோருக்கு இடையேயான தொடர்ச்சியான சண்டைகள் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு ஆளாகும். இது அவர்களின் படிப்பு மற்றும் உடல்நலம் இரண்டையும் பாதிக்கிறது. அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. மறுபுறம், இது இளம் வயதிலேயே மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, பெற்றோர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் குழந்தைகள் முன் வாக்குவாதம் செய்யக்கூடாது.

Follow Us