AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மழைக்காலம் - Monsoon

மழைக்காலம் - Monsoon

இந்தியாவில், பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு காற்றினால் ஏற்படும் கனமழையைக் குறிக்கிறது. இந்தக் காற்று இந்தியப் பெருங்கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வந்து, நாட்டின் பெரும்பகுதி முழுவதும் மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. பருவமழை இந்தியாவின் விவசாயம், நீர்வளம் மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது பயிர்களுக்கு தண்ணீரை வழங்குகிறது. அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தும் பருவமழைகள் இந்தியப் பெருங்கடலுக்கு அருகிலுள்ள கோடை பருவமழைகள் ஆகும். கடலில் உள்ள சூடான நீர் ஆவியாகி காற்றில் உயர்கிறது. இது காற்றின் திசையை மாற்றி, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஈரப்பதத்தை நிலத்தை நோக்கிப் பாயச் செய்கிறது. சூடான, ஈரப்பதமான காற்று மேகத்தின் மீது போதும்போது மழையை உருவாக்குகிறது. இதன் விளைவாக பல மாதங்கள் கனமழை நீடிக்கும். மழைக்காலத்தில் ஏற்படும் பருவ மாற்றத்தால் சுகாதார பிரச்சனைகள் ஏற்படலாம். இது தொடர்பான பாதுகாப்பு விவரங்களும் இங்கே விவரிக்கப்படுகின்றன.

Read More

மழைக்காலம் வந்தாச்சு… இந்த காய்கறி, பழங்களை சாப்பிடும் முன் இருமுறை யோசிங்க!

Monsoon Diet Alert: மழைக்காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களில் கிருமிகள், பூஞ்சைகள் அதிகம் வளரக்கூடும் என்பதால் அவற்றை நன்றாக கழுவி மட்டுமே சாப்பிட வேண்டும். வெட்டிய பழங்கள் மற்றும் நீண்ட நேரம் வெளியில் வைத்த உணவுகளை தவிர்ப்பது உடல்நலத்திற்கு பாதுகாப்பானது. குறிப்பாக இலைக் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து வேக வைத்து சாப்பிடுவது தொற்று அபாயத்தை குறைக்கும்.

கனமழை நேரத்தில் மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிப்பதன் காரணம் என்ன?

Electrical Safety: கனமழை மற்றும் இடியுடன் கூடிய நேரங்களில் மின்னழுத்த மாற்றம் ஏற்பட்டு மின்சாதனங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. ஈரப்பதம் அதிகரிப்பதால் மின்கசிவு மற்றும் மின்சாரம் தாக்கும் அபாயமும் உயரும். தேவையற்ற மின்சாதனங்களை அணைத்து, பிளக்குகளை கழற்றி வைப்பது பாதுகாப்பை அதிகரிக்கும். மழைக்காலங்களில் மின்சார பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது உயிரையும், சொத்துகளையும் காக்க உதவும்.

மழைக்கால தலைக்குளியல்: தினமும் குளிப்பது நல்லதா?

Rainy Season Hair Care: மழைக்காலத்தில் தினமும் கெமிக்கல் ஷாம்புகளைப் பயன்படுத்தித் தலைக்குக் குளிப்பது கூந்தலின் வலிமையை வெகுவாகக் குறைத்துவிடும். தினமும் குளிப்பதால் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய் பசை நீங்கி வறட்சியும், கடுமையான அரிப்பும் உண்டாகும். கூந்தலில் தங்கும் அதிகப்படியான ஈரப்பதத்தால் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு பொடுகு மற்றும் முடி உதிர்வு இரட்டிப்பாகும்.

மழையில் நனைந்தால் பைக் டிஜிட்டல் மீட்டர் ரிப்பேர் ஆகுமா?

Bike Digital Meter: நவீன இருசக்கர வாகனங்களின் டிஜிட்டல் மீட்டர்கள் மழையில் நீண்ட நேரம் நனைந்தால், உள்ளே தண்ணீர் புகுந்து மின்சுற்று பாதிப்பால் (Short Circuit) முற்றிலும் செயலிழக்கக் கூடும். இதனைத் தவிர்க்க, மழைக் காலங்களில் வாகனத்தை வெளியில் நிறுத்தும்போது மீட்டரை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிப் பாதுகாப்பது அவசியமாகும்.

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்?

Don't Use an AC During the Monsoon: மழைக்காலத்தில் ஏசியை பயன்படுத்தாமல் இருந்தால் வீட்டுக்குள் ஈரப்பதம் அதிகரித்து, பூஞ்சை மற்றும் துர்நாற்றம் உருவாகும் வாய்ப்பு அதிகமாகும். இதனால் அலர்ஜி, சுவாசப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடைகள், புத்தகங்கள் மற்றும் மரச்சாமான்களும் ஈரத்தால் பாதிக்கப்படலாம். எனவே தேவையான நேரங்களில் ஏசியின் 'Dry Mode' பயன்படுத்துவது வீட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

மழைக்காலத்தில் முடி உதிர்வு, ஃபிரிஸ் பிரச்சனை அதிகமா?

Hair Care Tips: மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிக ஈரப்பதம் காரணமாக தலைமுடி சுருண்டு, ஃபிரிஸ் பிரச்சனை அதிகரிக்கலாம். சரியான பராமரிப்பு மூலம் முடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். கடுமையான ரசாயனங்கள் கொண்ட ஷாம்புகளுக்கு பதிலாக மென்மையான ஷாம்புகளை பயன்படுத்துவது நல்லது.

ஜில்லென்ற மழைக்காலம்… தப்பாமல் தற்காத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

Waterborne Diseases: மழைக்காலம் தொடங்கிவிட்டாலே குளுமையான சூழல் மனதிற்கு இதம் தந்தாலும், கூடவே டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் சளி, இருமல் போன்ற பருவகால நோய்களும் படையெடுக்கத் தொடங்கிவிடுகின்றன. இந்த மழைக்காலத்தில் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்பதற்கான சில முக்கிய ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்திலும் மழலைகள் ஜொலிக்க: இதோ எளிய வழிகள்!

Monsoon Health: மழைக்காலம் தொடங்கும் போது குளிர்ந்த காற்றும், இதமான சூழலும் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், குழந்தைகளுக்கான நோய் பாதிப்புகளும் கூடவே வந்துவிடுகின்றன. இந்த பருவத்தில் சளி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகள் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முழுமையாகப் பாதுகாக்க முடியும்.

மழைக்கால வீட்டு நமநமப்பிற்கு வையுங்கள் முற்றுப்புள்ளி!

Monsoon Moisture: பருவமழைக்காலம் தொடங்கும் போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி பரவினாலும், வீடுகளுக்குள் ஒரு பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் காற்றில் கலந்திருக்கும் அளவுக்கு அதிகமான ஈரப்பதம். இந்த மழைக்கால ஈரப்பதப் பிரச்சினையை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே மிக எளிதாக எப்படிச் சமாளிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

மழைக்கால உணவுப் பழக்கம்: ஆரோக்கியத்தைக் கெடுக்கும் இந்த தவறுகளைத் தவிருங்கள்!

Monsoon Season: மழைக்காலத்தில் செரிமானத் திறன் குறைவதால் சாலையோரத் திறந்தவெளி உணவுகள் மற்றும் ஈக்கள் மொய்த்த தண்பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நச்சுத்தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஈரப்பதமான சூழலில் கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளில் கிருமிகள் வேகமாகப் பெருகுவதால், அவற்றை உப்பு நீரில் நன்றாகக் கழுவி, முழுமையாக வேகவைத்து மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

மழை பெய்தாலும் காய்ச்சல் வராது… இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள்!

Rainy Season: மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் இருக்க கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவுவது மிகவும் முக்கியம். சத்தான உணவுகளை சாப்பிட்டு, போதுமான தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மழையில் நனைந்தால் உடனே உலர்ந்த ஆடைகளை மாற்றி அணிவதும் அவசியம். போதிய தூக்கமும் சுற்றுப்புற சுகாதாரமும் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகளைத் தடுக்க உதவும்.

மழைக்கால தும்பல், இருமலுக்கு ‘டாட்டா’… ஆரோக்கியமாய் வாழ எளிய ‘ரூட்டு’!

Monsoon Diseases: பருவமழைக்காலத்தில் காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் ஆங்காங்கே தேங்கும் மழைநீர் காரணமாக டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற பல்வேறு பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுகள் வேகமாகப் பரவத் தொடங்குகின்றன. இந்தத் தொற்றுகளில் இருந்து தப்பிக்க நமது வீட்டுச் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், கொசு வலைகளைப் பயன்படுத்தி கொசுக்கள் கடிப்பதைத் தீவிரமாகத் தடுக்க வேண்டும்.

அடைமழை வந்தாலும் அச்சமில்லை… இந்த 5 வழிகள் உங்கள் வீட்டைக் காக்கும்!

During Heavy Rain: அடைமழைக்கு முன் வீட்டின் மேற்கூரை, சுவர்கள் மற்றும் ஜன்னல்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். விரிசல் அல்லது நீர் கசிவு இருக்கும் பகுதிகளை உடனே சரிசெய்தால் மழைநீர் வீட்டிற்குள் புகுவதைத் தடுக்க முடியும். மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் மற்றும் குழாய்களில் குப்பைகள் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மழைக்கால ஈரப்பதத்தில் சருமம், முடியை எப்படி பாதுகாப்பது?

Monsoon Humidity: மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம் சருமம் மற்றும் முடியில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது, லேசான மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். மழையில் நனைந்த முடியை உடனே உலர்த்தி, தலையை சுத்தமாக பராமரிப்பதும் முக்கியம். சரியான பராமரிப்பு மூலம் மழைக்காலத்திலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

மழைக்காலத்திலும் சன்ஸ்கிரீன் யூஸ் பண்ணனுமா? மருத்துவர் சொல்வதென்ன?

Rainy Season Tips : நாட்டின் பல பகுதிகளில் தற்போது பருவமழை நிலவி வருகிறது. மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக, இந்தப் பருவத்தில் சூரியன் சருமத்திற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், அதனால் சன்ஸ்கிரீன் பூசத் தேவையில்லை என்றும் மக்கள் பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் அது தோல் சிக்கலைத்தான் உண்டாக்கும்