தேனிலவு செல்ல பெண் செய்த கொடூரம்.. பறிபோன 2 உயிர்கள்.. அதிர்ச்சி பின்னணி!
Uttar Pradesh Crime News : தேனிலவுக்கு செல்வதற்காக தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் சேர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

உத்தர பிரதேசம், ஜூன் 20 : உத்தர பிரதேச மாநிலத்தில் தனது இரண்டு குழந்தைகள் பெண் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலுடன் தேனிலவுக்கு செல்வதற்காக தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக சமீப காலங்களில் நடக்கும் கொலை சம்பவங்கள் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கொலை சம்பவங்கள் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் நாள்தோறும் தொடர்ந்து வருகிறது.
தேனிலவு செல்ல பெண் செய்த கொடூரம்
இப்படியான சூழலில், உத்தர பிரசேதத்தில் ஒரு மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. அதாவது, இரண்டு குழந்தைகளை தாய் கொடூர முறையில் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உள்ள ரோட்கலி கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயதான பெண் முஸ்கன்.
அவரது கணவர் வசீம். அவர் சண்டிகரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கு ஐந்து வயது மற்றும் ஒரு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், பெண் முஸ்கன் திருமணத்திற்கு மீறிய இருந்துள்ளதாக கூறப்படுகிறது.




அதே பகுதியைச் சேர்ந்த ஜுனைத் என்பவருடன் முஸ்கன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளதாக தெரிகிறது. சில மாதங்களாகவே இருவரும் நெருங்கி பழகி வந்தள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜுனைத்துடன் சேர்ந்து முஸ்கன் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்துள்ளார்.
அதிர்ச்சி பின்னணி
இரண்டு குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் குறித்து அறிந்த போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சடலமாக கிடந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தனது காதலன் ஜுனைத்துடன் தேனிலவு செல்ல திட்டமிட்டதால், தனது இரண்டு குழந்தைகளை இருவரும் சேர்ந்து விஷம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறுகையில், “இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தாயாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்தோம். இதனால், அவரை காவலில் எடுத்து விசாரித்ததில், தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இரண்டு குழந்தைகளையும் கொன்ற பிறகு இருவரும் தேனிலவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்” என்றார். மேலும், தனது காதலன் ஜுனைத்துடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு தனது குழந்தைகள் ஒரு தடையாக இருப்பதாக கொலை செய்ததாக பெண் மூஸ்கன் வாக்குமூலம் அளித்துள்ளார்.