Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அடிக்கடி செல்போன் பயன்படுத்திய மனைவி.. ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்.. கர்நாடகாவில் ஷாக்!

Karnataka Crime News : கர்நாடகாவில் மனைவியை கணவன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி மனைவி செல்போன் பயன்படுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாகவும், இதனால் ஆத்திரத்தில் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடிக்கடி செல்போன் பயன்படுத்திய மனைவி.. ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்.. கர்நாடகாவில் ஷாக்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 20 Jun 2025 14:35 PM

கர்நாடக, ஜூன் 20 : கர்நாடகாவில் மனைவியை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி போனை பயன்படுத்தியால் ஆத்திரத்தில் மனைவியை கணவர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் கர்நாடகாவின் பிரம்மவர் தாலுகாவின் ஹிலியானா கிராமத்தில் நடந்துள்ளது. 2025 ஜூன் 19ஆம் தேதி நடந்துள்ளது. ஹிலியானா கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் ரேகா (27). அவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் கணேஷ் பூஜாரி (42). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. பெண் ரேகா அடிக்கடி மொபைல் போனை பயன்படுத்தி வந்திருக்கிறார்.

அடிக்கடி செல்போன் பயன்படுத்திய மனைவியை கொன்ற கணவன்

இதனால், இவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், 2025 ஜூன் 19ஆம் தேதி மீண்டும் கணேஷ் மற்றும் ரேகாவுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஆத்திரத்தில் அரிவாளால் மனைவி ரேகாவை கணவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

மனைவி ரேகாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து கணேஷ் தப்பிச் சென்றிருக்கிறார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரோகாவை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பெண் ரேகா உயிரிழந்துவிட்டாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய கணேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சங்கரநாராயணா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மற்றொரு சம்பவம்

முன்னதாக, கர்நாடகாவின் படகுண்டி கிராமத்தில் குடும்ப தகராறில் கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்திருக்கிறார். தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரித்தில் கர்ப்பிணியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாத நபர்களை விட  தெரிந்த நபர்களே இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள்  தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் தொடர்ந்து வருகிறது. எனவே, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலை, வன்முறை சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.