Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதலுக்கு மறுப்பு: காதலி வீட்டில் காதலன் விபரீத முடிவா? போலீசார் விசாரணை

Tragic Kanyakumari Love Story: கன்னியாகுமரி அருகே, காதல் தோல்வியால் 22 வயது ஐ.டி. ஊழியர் தனுஷ் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். பள்ளி நண்பியுடன் ஏற்பட்ட காதலை பெற்றோர் எதிர்த்ததால், காதலியை சந்திக்க முயன்று தோல்வியடைந்தார். தனுஷின் பெற்றோர் கொலை மிரட்டல் இருந்ததாகவும், இது தற்கொலை அல்ல எனவும் சந்தேகிக்கின்றனர்.

காதலுக்கு மறுப்பு: காதலி வீட்டில் காதலன் விபரீத முடிவா? போலீசார் விசாரணை
கன்னியாகுமரியில் காதலி வீட்டில் காதலன் விபரீத முடிவாImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 20 Jun 2025 09:37 AM

கன்னியாகுமரி ஜூன் 20: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் (Kulasekaram, Kanyakumari District) அருகே காவுவிளை பகுதியைச் சேர்ந்த தனுஷ் (22) என்ற இளைஞர், காதலியின் வீட்டில் விபரீத முடிவு எடுத்தார். பள்ளி நாட்களில் ஏற்பட்ட காதலை பெற்றோர் எதிர்த்ததால், காதலியை பார்க்க முடியாத மனவலி அவருக்கு ஏற்பட்டது. தனுஷ் (Dhanush) கோவையில் ஐ.டி. (Kovai IT Company) நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பெண்ணின் பெற்றோர் திருமணம் மறுத்ததால், கடந்த 2025 ஜூன் 18 ஆம் தேதி புதன்கிழமை இரவு அவர் பெண்ணின் வீட்டிற்கு சென்று சந்திக்க முயன்றார். சந்திக்க முடியாததால், வீட்டு பின்புற மாடியில் தூக்கிட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் சந்தேகங்கள் எழுப்பி, கொலை மிரட்டலும் இருந்ததாகக் கூறியுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி காதலால் விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள காவுவிளை காலனியைச் சேர்ந்த இளைஞர் தனுஷ் (வயது 22), 2025 ஜூன் 18 ஆம் தேதி புதன்கிழமை இரவு ஒரு பெண்ணின் வீட்டில் தூக்கிட்டு விபரீத முடிவு எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் காதல்

தனுஷ், துரைசாமி – தனலெட்சுமி தம்பதியின் மகனாகும். பள்ளி நாட்களில் குலசேகரம் காவல்நிலையம் பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும்போது, வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் காதல் ஏற்பட்டது. பின்னர் குடும்பத்துடன் கோவைக்கு இடம்பெயர்ந்த தனுஷ், அங்கே பொறியியல் பட்டம் பெற்றுத், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றினார்.

பெற்றோருடன் சென்றும் காதலுக்கு மறுப்பு

அதே நேரத்தில் அந்த மாணவியும் கோவையில் உள்ள கல்லூரியில் சேர்ந்திருந்தார். இருவரது காதலையும் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். பெண்ணின் பெற்றோர், அவளின் படிப்பை நிறுத்திவிட்டு, திருமணம் நடத்த முயன்றனர். காதலியை தொடர்புகொள்ள முடியாமல் தவித்த தனுஷ், தனது பெற்றோருடன் பெண்ணின் வீட்டுக்குச் சென்று திருமணத்திற்காக பேச முயன்றபோதும், அவர்கள் மறுத்துவிட்டனர்.

காதலால் விபரீத முடிவு

இளைஞரின் மரணம் சந்தேகம்

இதையடுத்து, 2025 ஜூன் 18 ஆம் தேதி புதன்கிழமை இரவு தனுஷ், அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று சந்திக்க முயன்றார். சந்திக்க முடியாத வருத்தத்தில், அவர் வீட்டின் பின்புற மாடியில் சன்சைடில் கயிறு கட்டி தூக்கிட்டு விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

தகவல் பெறும் பொழுது குலசேகரம் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு கூறாய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபரீத முடிவா அல்லது சந்தேகத்திற்கிடமான மரணமா?

இந்நிலையில், தனுஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இது வெறும் விபரீத முடிவா அல்லது சந்தேகத்திற்கிடமான மரணமா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், பெண்ணின் தந்தை முகமது அலி, “தனுஷ் என் வீட்டிற்கு வந்தால் அவனை மீண்டும் அனுப்பமாட்டேன்” என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக குலசேகரம் காவல்நிலையத்தில் உறவினர்கள் திரண்டதால் நிலைமை பரபரப்பாக மாறியுள்ளது.

தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

தற்கொலை எண்ணங்கள் வந்தால், நீங்கள் தனியாக இல்லை. மன அழுத்தம், நெருக்கடியான சூழ்நிலை, தவிர்க்க முடியாத அனுபவங்கள் போன்றவை யாரையும் தற்கொலை எண்ணத்துக்கு இட்டுச் செல்லலாம். ஆனால், இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. தயங்காமல் உதவியை தேடுங்கள்.

மனநல ஹெல்ப்லைன் எண்கள்

தன்னம்பிக்கை – 104 (தமிழ்நாடு அரசின் மனநலம் ஆலோசனை சேவை)

Sneha Foundation – 044 2464 0050 / 044 2464 0060 (24 மணி நேரம், தமிழிலும் செயல்படுகிறது)

iCall (TISS) – +91 9152987821 (WhatsApp வழியாகவும் கிடைக்கும்)