பெற்ற மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்.. 6 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை.. ஷாக் சம்பவம்!
Mother Arrested For Abusing Her Own Child | பெங்களூருவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் 6 ஆண்டுகளாக தனது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தாயை கைது செய்துள்ளனர்.

பெங்களூரு. ஜூன் 29 : பெங்களூருவில் (Bengaluru) பெற்ற தாயே தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய்யுள்ளது. மாணவி படிக்கும் பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நடைபெற்ற நிலையில், மாணவிக்கு தனக்கு நடைபெற்ற இந்த கொடுமை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். மாணவியின் வாக்குமூலத்தை கேட்ட பள்ளி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தாயை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்
கர்நாடக (Karnataka) மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் 38 வயது பெண். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவன் பிரிந்து சென்று விட்ட நிலையில், அந்தப் பெண் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் மகள் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அந்தப் பள்ளியில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.
அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி பள்ளி நிர்வாகத்திடம் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார். அதாவது கடந்த ஆறு ஆண்டுகளாக தனது தாய் தன்னை பாலியல் வன் கொடுமை செய்து வந்ததாக அவர் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.




அதிர்ச்சியூட்டும் தகவலை சொன்ன தாய்
புகாரின் அடிப்படையில் பள்ளிக்கு வந்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். போலீசார் நடத்தி விசாரணையில் மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார். இதன் காரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் தாயாரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, திருமணத்திற்கு பிறகு கணவருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தனது மகளுக்கு கற்றுக் கொடுத்ததாக அந்த பெண் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார். இதனை எடுத்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயே தனது மகளிடம் 6 ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.