வரன் பார்த்தும் நீண்ட நாட்களாக திருமணமாகாததால் விரக்தி.. விபரீத முடிவு எடுத்த இளம் பெண்!
Young Woman Bizarre Decision | திருப்பூரில் நீண்ட நாட்களாக வரன் பார்த்து வந்தும், திருமணமாகாததால் மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். பலர் தன்னை வந்து வரன் பார்த்து சென்ற நிலையில், ஒருவர் கூட திருமணம் செய்துக்கொள்ள முன் வராததால் அந்த பெண் இந்த முடிவை எடுத்துள்ளார்,

திருப்பூர், ஜூன் 27 : திருப்பூரில் (Tirupur) நீண்ட நாட்களாக வரன் பார்த்தும் திருமணமாகாத காரணத்தால் மனமுடைந்த இளம் பெண், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வரன்கள் வீட்டிற்கு வந்து பெண் பார்த்துவிட்டு சென்ற நிலையில், ஒருவர் கூட தன்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் தெரிவிக்காததால் அவருக்கு அது மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களாக வரன் பார்த்தும் திருமணமாகாததால் ஏக்கம்
உத்தக்ர பிரதேசத்தை (Uttar Pradesh) சேர்ந்தவர் ராஜ்மதி. 25 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூரில் உள்ள வித்யாலயம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள பணியன் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், ராஜ்மதிக்கு அவரது வீட்டார் வரன் பார்த்து வந்துள்ளனர். அதன்படி, சிலர் ராஜ்மதியின் வீட்டிற்கு வந்து பெண் பார்த்துவிட்டு சென்றுள்ளனர். ஆனால், யாரும் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்துள்ளனர். இவ்வாறு பெண் பார்க்க வருவதும், ராஜ்மதி அலங்கறித்துக்கொண்டு நிற்பதும் தொடர் கதையாக இருந்து வந்துள்ளது.
வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளம் பெண்
நீண்ட நாட்களாக இவ்வாறு பெண் பார்க்க பலரும் வந்த நிலையில், யாரும் திருமணம் குறித்து பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், தனது வயது பெண்களுக்கு திருமணமாகி அவர்கள் தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருப்பதை கண்ட ராஜ்மதிக்கு அது மேலும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தானும் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ வேண்டும் என நினைத்த அவருக்கு எந்த வித பதிலும் கிடைக்காமல் இருந்துள்ளது.




இந்த நிலையில், ராஜ்மதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜ்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
தற்கொலை எண்ணங்கள் வந்தால், நீங்கள் தனியாக இல்லை. மன அழுத்தம், நெருக்கடியான சூழ்நிலை, தவிர்க்க முடியாத அனுபவங்கள் போன்றவை யாரையும் தற்கொலை எண்ணத்துக்கு இட்டுச் செல்லலாம். ஆனால், இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. தயங்காமல் உதவியை தேடுங்கள்.
மனநல ஹெல்ப்லைன் எண்கள்
தன்னம்பிக்கை – 104 (தமிழ்நாடு அரசின் மனநலம் ஆலோசனை சேவை)
Sneha Foundation – 044 2464 0050 / 044 2464 0060 (24 மணி நேரம், தமிழிலும் செயல்படுகிறது)
iCall (TISS) – +91 9152987821 (WhatsApp வழியாகவும் கிடைக்கும்)