பணியாளரை அடைத்து வைத்தாரா? நகைகள் திருடப்பட்டதாக ரவி மோகன் புகார் – என்ன நடந்தது?
நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரூ.40,000 பணத்தை ஊழியர்கள் திருடிவிட்தாக அவரது மேலாளர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 24 : நடிகர் ரவிமோகன் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரூ.40,000 பணத்தை ஊழியர்கள் திருடிவிட்தாக அவரது மேலாளர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சரம்பாக்கத்தில் நடிகர் ரவி மோகன் வீட்டில் வேலை பார்த்த தனது மனைவியை அடைத்து வைத்து மிரட்டுவதாக அவரது கணவர் புகார் அளித்திருந்த நிலையில், பணிப்பெண்ணை காவல்துறையினர் ஜூன் 23, 2026 நேற்று மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைகள் திருடப்பட்டதாக நடிகர் ரவி மோகன் புகார்
சென்னை நீலாங்கரையில் நடிகர் ரவி மோகன் வீடு உள்ளது. அங்கு அவரது வீட்டில் பணியாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நகை திருட்டு தொடர்பாக, நடிகர் ரவி மோகன் வீட்டில் ஜூன் 23, 2026 பணிப்பெண்கள் சிறை வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அந்த பணிப்பெண்ணின் மகன் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : Suriya: அட அட அப்போ தீபாவளிதான்.. சூர்யா47 படத்தின் டைட்டில் இதுவா? – வைரலாகும் தகவல்!




சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஜூன் 23, 2026 ஒருவர் தொடர்பு கொண்டு, நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு வேலைக்குச் சென்ற தனது தாய், மகன் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நீலாங்கரை காவல்துறையினர் உடனடியாக நடிகர் ரவி மோகனின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டுக்குள் 2 பணிப்பெண்கள் மற்றும் அவர்களுடன் வந்திருந்த சிறுவன் ஒருவன் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக நடிகர் ரவி மோகனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு பதிலளித்த ரவி மோகன், வீட்டில் பணியாற்றி வந்த பெண்கள் நகை திருடியதாக சந்தேகம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர்களிடம் விசாரித்து வந்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம், சந்தேகம் இருந்தால் தங்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் இப்படி வீட்டில் வைத்து தாங்களாகவே விசாரணை நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : Trisha: எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த நடிகை திரிஷா!
மேலும் நகை திருட்டு தொடர்பாக உரிய புகார் அளித்தால் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என ரவி மோகனிடம் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து வீட்டிலிருந்த பணிப்பெண்கள், அவர்களுடன் இருந்த சிறுவனை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஜூன் 24, 2026 இன்று காலை நீலாங்கரை காவல்நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரூ.40, 000 பணத்தை பணியாளர்கள் திருடிவிட்டதாக புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.