Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் இவங்க தான் டாப் 4 ஃபைனலிஸ்ட் இவர்களதான்… இன்று வெளியேறும் நபர் இவர் தானா?

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியாளர்கள் யார் என்று முடிவான நிலையில் இன்று அவர்களின் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

பிக்பாஸில் இவங்க தான் டாப் 4 ஃபைனலிஸ்ட் இவர்களதான்… இன்று வெளியேறும் நபர் இவர் தானா?
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jan 2026 10:51 AM IST

தமிழக மக்களிடையே தற்போது அதிக அளவில் வரவேற்பைப் பெறும் சின்னத்திரை நிகழ்ச்சியாக உள்ளது இந்த பிக்பாஸ். அதன்படி இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் என்று அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே பல கருத்துகள் வெளிவரத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த 9-வது சீசனின் கலந்துகொண்ட போட்டியாளர்களின் நடவடிக்கைகள் அதிக அளவில் மக்களிடையே எதிர்மறையான கருத்துகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல நெகட்டிவான விமர்சனங்களை பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பெற்று வந்தாலும் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. தொடர்ந்து திட்டிக்கொண்ட நிகழ்ச்சியை பார்த்து வந்தனர் மக்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களுடன் சேர்ந்து மொத்தம் 24 போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில் கடந்த 13-வது வார இறுதியில் கம்ருதின் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சுபிக்ஸா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மொத்தம் 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இந்த வாரம் நடைப்பெற்ற பணப்பெட்டி டாஸ்கில் 18 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு வினோத் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸில் இருந்து இன்று எவிக்டாவது இவர்தான்?

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது மொத்தம் 5 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் விக்ரம், சபரி, அரோரா, திவ்யா மற்றும் சாண்ட்ரா. இவர்களின் யார் வெற்றியாளர் என்பது வரும் வார இறுதியில் தெரியவரும். இந்த நிலையில் இந்த 14-வது வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. அதன்படி இன்று சாண்ட்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்றும் இறுதிப் போட்டியில் அரோரா, திவ்யா, சபரி மற்றும் விக்ரம் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி… எக்ஸ் தள பக்கத்தில் ஜிவி பிரகாஷ் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தூசி தட்டப்படும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படம்… பொங்கலுக்கு வெளியாகுமா?