AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே… 35 ஆண்டுகளைக் கடந்தது என் ராசாவின் மனசிலே படம்

35 Years Of En Rasavin Manasile Movie | நடிகர்கள் ராஜ்கிரன் மற்றும் மீனா நடிப்பில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் என் ராசாவின் மனசிலே. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே… 35 ஆண்டுகளைக் கடந்தது என் ராசாவின் மனசிலே படம்
என் ராசாவின் மனசிலேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Apr 2026 16:43 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் என் ராசாவின் மனசிலே. இந்தப் படத்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா எழுதி இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மீனா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ் சந்தர், சாரதா ப்ரீதா, ஸ்ரீவித்யா, நம்பிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, டப்பிங் ஜானகி, கே.எஸ்.ஜெயலட்சுமி, மனோகர், ராம்போ ராஜ்குமார், பங்கஜமாக பபிதா, சாமிக்கண்ணு என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராஜ்கிரன் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

35 ஆண்டுகளைக் கடந்தது என் ராசாவின் மனசிலே படம்:

தனது கிராமத்தில் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு முரட்டுதனமான ஆண் தான் ராஜ்கிரன். இவரக்கு தனது முறைப்பெண் மீனா மீது காதல் இருக்கிறது. அவரை திருமணம் செய்ய நினைக்கிறார். மீனாவின் கதாப்பாத்திரமோ மிகவும் சாந்தமான ஒன்று. நேர் எதிரான இவர்களின் குணங்கள் திருமணத்திற்கு பிறகு எப்படி எல்லாம் மாறுகிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 35-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா? 18 ஆண்டுகளை நிறைவு செய்தது சந்தோஷ் சுப்ரமணியம் படம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Ajith: ஒரு காவியக் காதல் கதை.. ரீ- ரிலீஸாகும் அஜித் -ஷாலினியின் அமர்க்களம் திரைப்படம் – எப்போது தெரியுமா?

Follow Us