AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக பற்றவைத்த தீ நாடாளுமன்றம் வரை பரவியது”.. புது வரலாறு படைத்துள்ளோம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

Tamilnadu Assembly Election: திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடுவதோடு நிறுத்தாமல், எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை உடைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் வாக்காளர்களைச் சிந்திக்க வைக்கவும் இந்த "நண்பர்கள் - துரோகிகள்" அஸ்திரத்தை முதல்வர் கையில் எடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

“திமுக பற்றவைத்த தீ நாடாளுமன்றம் வரை பரவியது”.. புது வரலாறு படைத்துள்ளோம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!
மு.க.ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Apr 2026 13:37 PM IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “நண்பர்கள், துரோகிகள்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், தற்போதைய அரசியல் சூழலில் யார் உண்மையான நண்பர்கள் மற்றும் யார் துரோகம் செய்கிறார்கள் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டிய தருணம் இது என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: “தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!

அதிமுக கூட்டணி குறித்து சாடல்:

இந்த வீடியோவில் முதல்வர் பேசியுள்ள சில முக்கியக் கருத்துகள்: கொள்கை அளவில் முரண்பட்டுவிட்டு, அதிகாரத்திற்காக ஒன்று சேரும் கட்சிகளைத் துரோகிகள் என்று அவர் மறைமுகமாகச் சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைப்பவர்கள் யாரென்பதை மக்கள் அறிவார்கள் என்று அவர் கூறியுள்ளார். “தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் உண்மையான நண்பர்களுக்கும், சுயநலத்திற்காக வேடம் போடும் துரோகிகளுக்கும் இடையிலான போர் இது” என்று அவர் வர்ணித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழல்:

திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடுவதோடு நிறுத்தாமல், எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை உடைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் வாக்காளர்களைச் சிந்திக்க வைக்கவும் இந்த “நண்பர்கள் – துரோகிகள்” அஸ்திரத்தை முதல்வர் கையில் எடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சிகள் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகின்றன என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி:

முன்னதாக, நேற்றைய தினம் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா (131வது திருத்தம்) என்பதால், நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை. இந்த மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்ததிலிருந்து, தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார். கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்றன. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது.

இதையும் படிக்க: கோவையில் மையமிடும் 3 துருவங்கள்.. மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு. இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும், யாருடைய குரலுக்கு இடம் இருக்கும் என்பதே தொகுதி மறுவரையறையின் நோக்கம். அது ஒன்றியத்தை பலப்படுத்த வேண்டுமே ஒழிய பலவீனப்படுத்தக் கூடாது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் ஆகியோரின் பாதையில் தமிழ்நாடு எப்போதும் நீதி, கண்ணியம், கூட்டாட்சிக்காக நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Follow Us