Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருத்துவ செலவுக்காக உறவினர்கள், நண்பர்களிடம் பெற்ற பணத்திற்கு வரி விதிக்கப்படுமா?

Tax on Crowdfunded Money : இந்தியாவில் ஒருவர் பெரிய நோயால் பாதிக்கப்பட்டால் அவரது குடும்பத்தினர் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மேலும் தனது உறவினர்கள், நண்பர்களிடம் பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அப்படி பெறப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுமா என்பது பலரது கேள்வியாக இருந்து வருகிறது. இந்த கட்டுரையில் அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

மருத்துவ செலவுக்காக உறவினர்கள், நண்பர்களிடம் பெற்ற பணத்திற்கு வரி விதிக்கப்படுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 02 Jun 2025 15:17 PM

இந்தியாவில் (India) ஒருவர் பெரிய நோயால் பாதிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் மருத்துவச் செலவுகள்  அவரது குடும்பத்தை கடும் நிதிச்சுமையில் ஆழ்த்தக்கூடும். காப்பீட்டுத் (Insurance)தொகை முடிந்துவிட்ட பிறகோ, அல்லது காப்பீடு இல்லையென்றாலோ பலர் மருத்துவ செலவுகளை சமாளிக்க நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நிதி பெறும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். வெளியே இருந்து கடன் பெற முடியாதபட்சத்தில் உறவினர்களிடம் இருந்தோ அல்லது நண்பர்களிடம் இருந்தோ கடன் பெறும் நிலைக்கு ஆளாகிறோம். ஆனால், இந்த வகையில் பெறப்படும் பணத்துக்கு வரிவிதிக்கபடுமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. இது தொடர்பான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வருமான வரித்துறை சட்டத்தில் இதுபற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

மிண்ட் இணையளத்தில் வெளியான கட்டுரையின் படி கடந்த 2024 ஜூலை மாதம், நவோதிர் சுதீர் என்பவரின் தந்தை பிரெயின் ஸ்ட்ரோக் (Brain Stroke) காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  மருத்துவ சிகிச்சை ஐ.சி.யூவில் ஒரு மாதம் மற்றும் பின்னர் ஸ்ட்ரோக் ரீஹெபிலிடேஷன் சென்டரில் நான்கு மாதங்களுக்கு மேல் நீடித்தது. காப்பீட்டுத் தொகை மிக விரைவில் தீர்ந்ததால், குடும்பம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியது. இதில், அவரது தாய் தனது சகோதரரிடமிருந்து ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். நவோதிர் தனது அத்தை மற்றும் மனைவியின் தாய் என முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் பெற்றுள்ளார். அதேசமயம், நண்பர்கள் மற்றும் தாயின் நண்பர்கள் உள்ளிட்ட மற்றவர்களிடமிருந்து ரூ.3,55,519 பெற்றுள்ளனர்.

வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய வருமான வரி சட்டம், பிரிவு 56(2)(x) படி, உறவினர் என வரையறுக்கப்பட்ட நபர்களிடமிருந்து இலவசமாக பெறப்படும் தொகை வரிவிதிக்கபடாது. இதன்படி அவரது தாய் தனது தம்பியிடமிருந்து பெற்ற ரூ.5 லட்சத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். நவோதிர் தனது அத்தை மற்றும் மனைவியின் பெற்ற ரூ. 5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றுக்கு உறவினர்கள் என்ற அடிப்படையில் வரி விலக்கு கிடைக்கும். ஆனால் நண்பர்கள் போன்றவர்களிடம் இருந்து பெறப்படும் தொகை  Income from Other Sources எனக் கருதி வரிவிதிக்கப்படலாம். சமீபத்தில் கிரௌட் ஃபண்டிங் மூலம் பெறப்பட்ட தொகைக்கு வரிவிதிக்கப்படும் என சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த வழக்கில் பெறப்பட்ட தொகை, தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் பணம் வாங்கிய நோக்கத்திற்கு முழுவதும் விதிக்கப்படவில்லை எனக் கூறி வதிக்கப்பட்டது.

கிரௌட் ஃபண்டிங் மூலம் பணம் வாங்குவதில் உள்ள சிக்கல்

நவோதிர் பெற்ற நிதி தனியான வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மேலும் மருத்துவச் செலவுகளுக்கே வழங்கப்பட்டதை ஆவணங்களுடன் நிரூபிக்க முடிந்தால், அவற்றை வரிவிலக்குக்குரியதாக வாதிக்கலாம். மேலும், பெற்ற பணம் முழுவதும் மருத்துவ செலவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படது என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டியிருக்கும்.  இவ்வகை நிதி பெறும் நபர்கள், மருத்துவ செலவுகள் தொடர்பான அனைத்து ரசீதுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் நிதி கொடுத்தவர்கள் எதற்காக அளித்தனர் என்பது போன்ற ஆவணங்களைத் தக்க வைத்திருப்பது அவசியம்.

சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான்...
சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான்......
முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்... மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்... மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்...
தவெக கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்
தவெக கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்...
3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல...
3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல......
இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி?
இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி?...
'ஆர்சிபிக்காக என் இளமையைக் கொடுத்திருக்கிறேன்' - விராட் கோலி
'ஆர்சிபிக்காக என் இளமையைக் கொடுத்திருக்கிறேன்' - விராட் கோலி...
18 ஆண்டுகள் காத்திருப்பு..! கோப்பையை ஏந்திய ஆர்சிபி...!
18 ஆண்டுகள் காத்திருப்பு..! கோப்பையை ஏந்திய ஆர்சிபி...!...
நீரிழிநோய் மற்றும் உயர் ரத்த அழுத்ததை குறைக்க உதவும் 5 பழக்கங்கள்
நீரிழிநோய் மற்றும் உயர் ரத்த அழுத்ததை குறைக்க உதவும் 5 பழக்கங்கள்...
'தக் லைஃப்' வெளியிட விரும்புகிறோம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
'தக் லைஃப்' வெளியிட விரும்புகிறோம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை...
3 Wicket 3 ரன்கள்! கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங்!
3 Wicket 3 ரன்கள்! கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங்!...
அதைப் பார்த்தால் எனக்குப் பயம் - மணிகண்டன்!
அதைப் பார்த்தால் எனக்குப் பயம் - மணிகண்டன்!...