Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செயலிழந்த வங்கி கணக்குகளை புதுப்பிக்க வேண்டுமா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுகள் இதோ!

RBI eases KYC process : வாடிக்கையாளர்களின் செயல்படாத வங்கிக் கணக்குகளை புதுப்பிக்கும் முறைகளை இந்திய ரிசர்வ் வங்கி எளிமைப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. இந்த கட்டுரையில் செயல்படாத வங்கி கணக்குகளை புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

செயலிழந்த வங்கி கணக்குகளை புதுப்பிக்க வேண்டுமா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுகள் இதோ!
மாதிரிப் புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 14 Jun 2025 15:35 PM

வேலை காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, அல்லது கடன் பெறவோ குறிப்பிட்ட சில வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டியிருக்கும். நம் அந்த வேலையை விட்டு நீங்கிய பிறகோ, அல்லது கடனை அடைத்த பிறகோ நம் அந்த வங்கி கணக்கை முடிக்காமல் வைத்திருப்போம். அப்படி வாடிக்கையாளர்கள் 10 ஆண்டுகளாக எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யாமல் வைத்திருக்கும் வங்கி சேமிப்பு அல்லது நிலுவை கணக்குகள் செயலிழந்த கணக்குகள் (Inoperative Accounts) என்று அழைக்கப்படுகின்றன. இதேபோல், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து 10 ஆண்டுகளாக கோரப்படாமல் இருக்கும் பணம் கோரப்படாத தொகை (Unclaimed Deposits) என அழைக்கப்படுகின்றன. இந்த வகை கணக்குகளின் இருப்புத் தொகைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் டெபாசிடர் எஜுகேஷன் அண்ட் அவார்னஸ் ஃபண்ட் (Depositor Education and Awareness Fund)  என்ற நிதியில் சேமிக்கப்படுகின்றன. கடந்த ஜூன் 12, 2025 அன்று வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின் படி, வாடிக்கையாளர்கள் தற்போது கீழ்க்கண்ட வழிகளில் தங்கள் செயலிழந்த கணக்குகளை மீண்டும் செயல்படுத்தலாம்.

எந்தவொரு கிளையிலும் KYC புதுப்பிக்கலாம்

இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை உருவாக்கிய கிளையிலேயே சென்று KYC (Know Your Customer) விவரங்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எந்தவொரு கிளையிலும் அந்த வசதியை வங்கிகள் வழங்க வேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

வீடியோ வழியாக KYC அப்டேட் செய்வதற்கான வாய்ப்பு

வீடியோ மூலம் அடையாளம் நிரூபிக்கும் முறையின் (Video-Customer Identification Process) படி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் தகவல்களை அப்டேட் செய்துவிடலாம். இது முதியவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், மற்றும் புலம் பெயர்ந்த மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகிறது.

வணிக நிரூபர்களின் உதவியுடன் KYC அப்டேட்

வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட வணிக நிரூபர்கள் மூலம் KYC புதுப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு நேரில் சென்று உதவலாம். குறிப்பாக, நகரத்துக்கு வெளியேயும், கிளைகள் இல்லாத பகுதிகளிலும் இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

செயல்படாத கணக்குகளை மீண்டும் எப்படி புதுப்பிப்பது?

செயலிலழந்த கணக்குகளை மேற்சொன்ன முறைகளில், அதாவது, வீடியோ வழியாகவோ, வணிக நிரூபர்கள் மூலமாகவோ, அருகில் உள்ள வங்கி கிளைகள் மூலமாகவோ KYC அப்டேட் செய்து கணக்குகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.  இந்த புதிய விதிமுறைகள் வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகவும், நவீன டிஜிட்டல் வசதிகளுடன் வங்கி சேவைகளை மீண்டும் பெற வழிவகுக்கின்றன. வீடியோ மூலம் KYC, எந்த கிளையிலும் வசதி, பிசிக்கள் உதவியுடன் சேவை என அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு நேரமும் பணமும் மிச்சமாகும் வகையில் அமைந்துள்ளன. இனி உங்கள் செயலிழந்த வங்கி கணக்குகளை புதுப்பிக்க இந்த முறைகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!...
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....