AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தெருநாய் கடித்து மூதாட்டி உட்பட 4 பேர் படுகாயம்! ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

Srivaikuntam dog attack: ஸ்ரீவைகுண்டம் தெருநாய் கடித்து 4 பேர் காயம் அடைந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மூதாட்டி ஒருவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிமன்றம் எச்சரித்தும் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருவதால், உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய் கடித்து மூதாட்டி உட்பட 4 பேர் படுகாயம்! ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Jul 2026 12:15 PM IST

தூத்துக்குடி, ஜூலை 25: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெறிபிடித்த தெருநாய் கடித்ததில் மூதாட்டி உட்பட 4 பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை புளியமரத் தெரு பகுதியில் அதிகாலை வேளையில் தெருநாய் ஒன்று வெறிபிடித்துத் திரிந்துள்ளது.

இதையும் படிக்க: “நான் அமைச்சர்தான்.. ஆனா எனக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கான்!”.. திரையரங்கில் அழுத விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் நெகிழ்ச்சி விளக்கம்!

ஆடு, மாடுகளைக் கடித்த நாய்:

முதலில் அப்பகுதியில் நின்றிருந்த ஆடு மற்றும் மாடுகளைக் கடித்த அந்த வெறிநாய், பின்னர் அவ்வழியாக நடந்து சென்ற பெண்கள் மீதும் பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது. இத்தாக்குதலில் தென்திருப்பேரையைச் சேர்ந்த மாரி (45), சுந்தரி (60 – மூதாட்டி), பேச்சியம்மாள் மற்றும் கவிதா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனை அனுமதி: காயமடைந்தவர்கள் உடனடியாகத் தென்திருப்பேரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேல் சிகிச்சை: இதில் 60 வயதான சுந்தரி என்ற மூதாட்டியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (TVMC) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரூராட்சி நிர்வாகத்தின் விளக்கம்:

தெருநாய் தொல்லை குறித்து தென்திருப்பேரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பேரூராட்சிப் பகுதியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும், அவற்றைப்பிடித்துச் செல்ல போதுமான வாகன வசதிகள் இல்லை என்றும் தெரிவித்தனர். இதுவரை 13 நாய்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு அவற்றுக்குக் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

நீதிமன்ற அதிருப்தியும் பொதுமக்கள் கொந்தளிப்பும்:

தமிழகம் முழுவதும் தெருநாய்கள் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. “தெருநாய் தொல்லைக்கான தீர்வுகள் காகித அளவில் மட்டுமே இருக்கின்றன; களத்தில் முறையான நடவடிக்கைகள் இல்லை” என சென்னை உயர்நீதிமன்றமும் சமீபத்தில் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?

நீதிமன்றம் எச்சரித்தும் ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருவதால், உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து வெறிநாய்களைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us