அரசு கடன் வாங்குவதில் தவறில்லை, தமிழகத்துக்கு நிதி நிலுவை இல்லை… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
காஞ்சி பல்கலைகழகத்தில் ஜூன் 24, 2026 இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு நிதி நிலுவை எதுவும் இல்லை. அரசு கடன் வாங்குவதில் தவறில்லை. என்று பேசினார்.
சென்னை, ஜூன் 25 : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் பயணமாக சென்னை வந்தடைந்தார். சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் காஞ்சி பல்கலைக்கழகத்தில் ஜூன் 25, 2026 இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்துக்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என்றார். மேலும் அரசு கடன் வாங்குவதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
காஞ்சி பல்கலைகழகத்தில் ஜூன் 24, 2026 இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு நிதி நிலுவை எதுவும் இல்லை. அரசு கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால் அவற்றை அடிப்படை கட்டமைப்புக்கு செலவிட வேண்டும். கடன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிலுக்கான முதலீடுகளை செய்ய வேண்டும். வெறுமனே நலத் திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையை செலவிடுவது சரியல்ல என்றார்.