AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயரப்போகிறதா? தெளிவாக விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும், கடந்த கால மின் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கோ மின்வாரியத்திற்கோ எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒப்பந்த ஊழியர்களுக்கு 15 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் சம்பளம் வழங்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயரப்போகிறதா? தெளிவாக விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர்
மாதிரி புகைப்படம்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 25 Jun 2026 13:30 PM IST

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மின்சார வாரியத்தின் வருடாந்திர செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிடும் கூட்டத்தில் பேசிய அவர், இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தாததால் மக்களுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளார். கடந்த காலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், அதனால் பொதுமக்களுக்கோ அல்லது மின்சார வாரியத்தின் நிர்வாகத்திற்கோ எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்றும், இதனால் யார் பயனடைந்தார்கள் என்பதை முந்தைய ஆட்சியில் இருந்த மூன்று முன்னாள் அமைச்சர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மின் இணைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு விவரங்கள்

தமிழ்நாட்டில் தற்போது ஒட்டுமொத்தமாக 3 கோடியே 51 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் மிக முக்கியப் பங்காக 2 கோடியே 50 லட்சம் இணைப்புகள் வீட்டு உபயோக மின் இணைப்புகளாக உள்ளன. மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 99,573 விநியோக மின்மாற்றிகள் (Distribution Transformers) மற்றும் 25,963 கிலோமீட்டர் நீளமுள்ள உயர் அழுத்த மேல்நிலை மற்றும் நிலத்தடி வடங்கள் (HT OH & UG Lines) அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை முழுமையாக நிறைவு செய்வதற்கு இன்னும் ரூ. 8076.72 கோடி நிதி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படையான பணியிட மாற்றம்

மின்சார வாரிய ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரே நாளில் 3,440 கேங்மேன் பணியாளர்களுக்குப் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மின்வாரியத்தில் பணியிட மாற்றங்கள் அனைத்தும் முழுமையாக இணையதளம் (Online) மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்றும், ஊழியர்கள் இதற்காக இடைத்தரகர்களையோ அல்லது யாரையும் நேரடியாக அணுக வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தகுதியான பணியாளர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வுகளும் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியப் பாதுகாப்பு

மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதன்படி, அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் 15 நாட்களுக்குள் அவர்களது வங்கிச் கணக்குகளில் நேரடியாகச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான அடிப்படை நலன்களை ஒப்பந்ததாரர்கள் முறையாகச் செய்து தர வேண்டும் என்றும், இதில் ஏதேனும் தொய்வோ அல்லது விதிமீறலோ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிதி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி மற்றும் பசுமை மின் திட்டம்

கடந்த ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை மின் திட்டங்களில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் பல்வேறு நிதி வசூலிப்பு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். பசுமை மின் திட்டங்களில் நிலவிய இத்தகைய முறைகேடுகளைக் களைந்து, துறையை முறைப்படுத்த தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆட்சியில் இவ்வாறு ‘பார்ட்டி ஃபண்ட்’ கொடுத்து ஏமாந்தவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் தைரியமாகப் புகாரளிக்கலாம் என்றும், அவ்வாறு கூறினால் இழந்த பணத்தை மீட்டுத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இனிவரும் காலங்களில் மின்வாரியத்தில் ‘பார்ட்டி ஃபண்ட்’ போன்ற நடைமுறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, நிர்வாகம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

Follow Us