AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி​முக​வின் கிளைக் கழகம் முதல் தலை​மைக் கழகம் வரை ஒரே சீரான மறு சீரமைப்பு மற்​றும் மறுகட்​டமைப்பு பணி​களை மேற்​கொள்​வதற்​காக 10 பேர் கொண்ட ஆலோ​சனைக் குழுவை அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்டா​லின் அறிவித்துள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு –  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Jul 2026 08:03 AM IST

சென்னை, ஜூலை 1 : ​கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக தொகுதிகளை வென்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 59 தொகுதிகளில் வென்ற திமுக 2வது இடம் பிடித்து உதயநிதி ஸ்டாலின் எதிர்கட்சி தலைவரானார். திமுகவின் இந்த தோல்விக்கு சமூக வலைதளங்களில் சரியான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளகததே இதற்கு முக்கிய காரணம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு

அதன் ஒரு பகுதியாக திமுகவின் தோல்விக்கு காரணம் குறித்து தொண்டர்களின் கருத்துக் கேட்பதற்காக குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழு தொகுதி வாரியாக சென்று தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை சமர்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவில் மறுசீரமைப்பு செய்யவிருப்பதாக கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குழு ஒன்றை அறிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க : தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… இடதுசாரிகள் ஷாக் அறிவிப்பு.. இருந்தாலும்…!

தி​முக​வின் கிளைக் கழகம் முதல் தலை​மைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்​றும் மறுகட்​டமைப்பு பணி​களை மேற்​கொள்​வதற்​காக 10 பேர் கொண்ட ஆலோ​சனைக் குழுவை அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்டா​லின் அறிவித்துள்ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது, கடந்த சட்​டமன்ற தேர்​தல் முடிவு வெளி​யான உடனேயே கட்​சித் தொண்​டர்​களின் கருத்​துகளை கேட்க முடிவு செய்​து, அதற்​காக 19 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டன. இந்த ஆய்​வுக்​குழு​வில் 38 பேர் இடம்​பெற்​றிருந்​தனர்.

மு.க.ஸ்டாலினின் பதிவு

 

தமிழகம் முழு​வதும் பயணித்த இவர்​கள், ஆராய்ந்து அறிக்​கைகளை தயாரித்து என்​னிடம் வழங்​கி​யுள்​ளனர். இவர்​கள் அனை​வருமே திமுக​வின் மறுசீரமைப்​பையே வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அதனடிப்​படை​யில் கட்​சிக்கு புத்​துணர்ச்சி அளிக்​கும் வகை​யில் மறுசீரமைப்​புக்கு புதிய ஆலோ​சனை குழு அமைக்​கப்​படு​கிறது. இதில் முன்​னாள் அமைச்​சர்​கள் தங்​கம் தென்​னரசு, கீதா ஜீவன், அர.சக்​கர​பாணி, எஸ்​.எஸ்​.சிவசங்​கர், எம்​.பி.க்​கள் எம்​.எம்​.அப்​துல்​லா, ச.முரசொலி, முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் தமிழரசி ரவிக்​கு​மார், இ.பரந்​தாமன், எழிலன் மற்​றும் எஸ்​.கே.பி.கருணா ஆகியோர் இடம்​பெற்றுள்​ளனர்.

இதையும் படிக்க : போக்குவரத்து துறையில் அரசு வேலை மோசடி.. குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் மாஜி அமைச்சர் சிவசங்கர்!

இந்த குழு​வானது மாவட்​டங்​களில் மேற்​கொள்ள வேண்​டிய மறு​வரையறை, சார்பு அணி​களின் மறுசீரமைப்பு மற்​றும் தேர்​தல் பணிக்​குழு உள்​ளிட்ட பல்​வேறு குழுக்​களில் செய்ய வேண்​டிய மாற்​றங்​கள் குறித்து விரி​வாக ஆரா​யும். மேலும், தேர்​தல் பணி​களை தொய்​வின்றி செய்​வதற்​கான நிரந்தர அமைப்பு மற்​றும் தலை​மைக்​கான ஆலோ​சனை​களை வழங்​கும் ஒரு அமைப்பை உரு​வாக்​கு​வது குறித்​தும் தனது பரிந்​துரைகளை ஆகஸ்ட் மாதத்​தின் முதல் வாரத்​தில் என்​னிடம் வழங்​கும். அதன்​பின், தி​முக​வின் மறுசீரமைப்பு மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

Follow Us