தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர் – காங்கிரஸ் தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை இருந்த நிலையில் அவரை மாற்றி புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அறிவித்துள்ளது. மேலும், புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, ஜூன் 27 : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை இருந்த நிலையில் அவரை மாற்றி புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அறிவித்துள்ளது. புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தவெக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனையடுத்து அவர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் மாணிக்கம் தாகூர்
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போதே அவர் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சி தலைமையை அவர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சட்டமன்ற தேர்தலில்திமுக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
இதையும் படிக்க : மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதிப்பெயர்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்




தேர்தலுக்கு முன்பே தவெக கூட்டணிக்கு ஆதரவு அளித்தவர் என்ற வகையில், தவெக தரப்பினருக்கும் மாணிக்கம் தாகூர் மீது நன்மதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தவெக அரசு மீது அவ்வப்போது செல்வப்பெருந்தகை விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஜூன் 26, 2026 அன்று சசெய்தியாளர்களை சந்தித்த அவர், நான் தேர்தல் நடப்பதற்கு முன்பே, வாக்காளர்கள் மற்றும் பத்திரிகையாளர் மத்தியில் தேர்தல் முடிந்தவுடன் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என அறிவித்திருந்தேன். இதில் என்ன சந்தேகம் இருக்கிறது. பதவி விலகுவதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு காலத்தில் காங்கிரஸ் மாநில தலைவராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். பதவி கிடைத்த பிறகு மனநிறைவோடு விலகிவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!!
மேலும் பேசிய அவர், கடந்த வாரம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து, மாநில தலைவர் பதவியிலிருந்து என்னை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தேன். நான் பதவி விலக வேண்டும் என்று எந்த நெருக்கடியும் இல்லை. பதவியில் இருப்பதை விட, பதவியில் இல்லாத போது தான் மகிழ்ச்சியாக இருப்போம். அடுத்த மாநில தலைவரை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.