AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடையில் பணியாற்றிக்கொண்டு இருந்த சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

Man Tied Mangalyam On 17 Years Old Girl | இந்தியாவில் திருமணத்திற்கான பாரம்பரியமும், வரம்பும் உள்ள நிலையில், மதுரையில் கடையில் பணியாற்றிக்கொண்டு இருந்த சிறுமிக்கு இளைஞர் ஒருவர் கடைக்குள் புகுந்து திடீரென தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் பணியாற்றிக்கொண்டு இருந்த சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!
17 வயது சிறுமிக்கு திருமணம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2026 07:11 AM IST

மதுரை, ஜூன் 16 : மதுரையில் (Madurai) கடை ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் திடீரென தாலி கட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கடையில் பணியாற்றிக்கொண்டு இருந்த இளம் பெண்ணுக்கு, இளைஞர் தாலி கட்டிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடையில் பணியாற்றிக்கொண்டு இருந்த சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள பேன்சி கடை ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென கடைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், கடையில் வைத்தே அந்த சிறுமியின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதனை கண்ட அனைவரும் கடையை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடையில் பணியாற்றிய சக ஊழியர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியக் கூட்டணியில் இருந்து திமுக விலகவில்லை.. காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் விளக்கம்

சம்பவ இடத்திற்கு அதிரடியாக விரைந்த சிங்கப்பெண் அதிரடிப்படை

தனது மகளுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தினர் அது தொடர்பான உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சிங்கப்பெண் அதிரடிப்படை விரைந்து சென்றுள்ளது. அதனை கண்ட அந்த இளைஞர், அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

இதையும் படிங்க : வட மாநில தொழிலாளர்கள் குறித்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

மது போதையில் தாலி கட்டியது விசாரணையில் தெரிய வந்தது

இந்த நிலையில், தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் வீட்டில் மறைந்து இருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும், தாலி கட்டப்பட்ட 17 வயது சிறுமியை மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆக உள்ள நிலையில், 17 வயது சிறுமிக்கு இளைஞர் மது போதையில் தாலி கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us