IPL 2027: மனதளவில் சோர்வை கொடுத்த ஓனர்.. கோயங்கா பெயரை சொல்லாமல் சொன்ன கே.எல்.ராகுல்!
KL Rahul spoke about Sanjiv Goenka: கே.எல். ராகுல் இதுகுறித்து முதல் முறையாகப் பேசியுள்ளார். அதன் வீடியோ வைரலாகி வருகிறது. இருப்பினும், அப்போது கே.எல். ராகுல் சஞ்சீவ் கோயங்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் சில விஷயங்களைத் தெளிவாகக் கூறுவதைக் காண முடிந்தது.
இந்திய கிரிக்கெட் (Indian Cricket Team) வீரர் கே.எல். ராகுல், ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த நேரத்தில், ஹைதராபாத் அணி 166 ரன்கள் என்ற இலக்கை வெறும் 9.4 ஓவர்களில் எட்டியது. இந்தத் தோல்விக்குப் பிறகு ஸ்டேடியத்தில் ஏற்பட்ட அமளியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை (KL Rahul) களத்திலேயே நேரடியாகக் கடுமையாகச் சாடினார். இதுமட்டுமின்றி, கே.எல். ராகுலுடனான அவரது கோபமான வாக்குவாதம் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அந்தநேரத்தில், கே.எல்.ராகுல் கோபத்தில் இருந்தபோதும், தலைகுனிந்தபடி அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். கே.எல். ராகுலின் ரசிகர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது. நாடு முழுவதும் கோபம் பரவியது. ஏனென்றால், கே.எல். ராகுல் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பதால், ஸ்டேடியத்தில் அவரை இப்படி நடத்துவது தவறு என்று பலர் கூறினர்.
ALSO READ: மும்பையை விட்டு வெளியேறும் ஹர்திக்.. கொக்கி போடும் கேகேஆர், எல்எஸ்ஜி!




அதிக சோர்வு:
🚨 KL Rahul: “Sanjiv Goenka’s constant questions mentally drained me.”🚨
KL Rahul: What I found hardest as an IPL captain was the sheer number of meetings, reviews, and explanations required at the ownership level. It was mentally exhausting. By the end of an IPL season, I felt… pic.twitter.com/XPMQ6IoTOV
— Mahi Patel (@Mahi_Patel_07) August 3, 2026
இதற்கிடையில், கே.எல். ராகுல் இதுகுறித்து முதல் முறையாகப் பேசியுள்ளார். அதன் வீடியோ வைரலாகி வருகிறது. இருப்பினும், அப்போது கே.எல். ராகுல் சஞ்சீவ் கோயங்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் சில விஷயங்களைத் தெளிவாகக் கூறுவதைக் காண முடிந்தது. இதுகுறித்து பேசிய கே.எல்.ராகுல், “ ஒரு கேப்டனாக, பல கூட்டங்களும் ஆய்வுக் கூட்டங்களும் நடந்தன. இருப்பினும், தோல்விக்கு பிறகு அணி உரிமையாளர்களுக்கு விளக்கம் அளிப்பது தனக்கு ஒரு சவாலாக இருந்தது. இது என்னை மனதளவில் மிகவும் சோர்வடையச் செய்தது. தொடர்ந்து 10 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதால் ஏற்படும் சோர்வை விட, சில விதங்களில் நான் மனதளவிலும் உடலளவிலும் அதிகமாகவே சோர்வடைந்தேன். ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள், ஏன் அந்த வீரரைத் தேர்ந்தெடுத்தீர்கள்… ஏன் அணி மோசமாகச் செயல்பட்டது, இது போன்ற பல கேள்விகளை நீங்கள் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” என்றார்.
ALSO READ: பயிற்சியாளர் குழுவில் விடைபெற்ற டி திலீப்.. உணர்ச்சி வசப்பட்ட ரோஹித் சர்மா!
வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை:
Don’t be harsh on Sanjiv Goenka.
He was just having normal motivating conversation with KL Rahul.The real audio of the conversation is here.
Please listen to it carefully🙏🏻 pic.twitter.com/CCWGK1QWkk— Bruce (@_Bruce__007) May 9, 2024
தொடர்ந்து பேசிய கே.எல்.ராகுல், “உள்ளூர் தேசிய கிரிக்கெட்டில், பயிற்சியாளர்களுக்கும் தேர்வுக் குழுவிற்கும் சில விஷயங்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஆட்டத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் என்ன செய்தாலும் அல்லது எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தாலும், இந்த ஆட்டத்தில் வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆட்டத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட முடிவை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இதை விளக்குவது மிகவும் கடினமான ஒரு காரியம்.” என்று தெரிவித்தார்.