IPL 2026: ரஹானே ஓய்வு.. கேகேஆர் அணியின் அடுத்த கேப்டன் யார்..? டிரேடில் தேட வாய்ப்பு!
KKR New Captain: தற்போது புதிய கேப்டனைத் தேடிக்கொண்டிருக்கும் கேகேஆர் அணி, இந்தப் பொறுப்பை ஏற்கனவே உள்ள வீரரிடம் ஒப்படைக்குமா அல்லது புதிய வீரரிடம் ஒப்படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது, அணியில் உள்ள வீரர்களில் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருக்கும் ஒரே வீரர் ரிங்கு சிங்.
இந்திய அணியின் வீரர் அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். ரஹானேவின் விலகலைத் தொடர்ந்து, ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் சவாலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டுள்ளது. ரஹானேவின் தலைமையில் கொல்கத்தா அணியின் செயல்பாடு கலவையாகவே இருந்தது. தற்போது கேகேஆர் அணி, ரிங்கு சிங் அல்லது வர்த்தகப் பரிமாற்ற சாளரத்தின் மூலமாகவோ புதிய கேப்டனை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
ALSO READ: சிஎஸ்கே அதிரடி வீரரை குறிவைத்த எல்எஸ்ஜி.. பரிமாற்றமாக இந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளரா?
ரஹானே ஓய்வு:
இந்திய அணியின் வீரர் அஜிங்க்யா ரஹானே தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார். சர்வதேச, உள்ளூர் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை ரஹானே அறிவித்துள்ளார். அஜிங்க்யா ரஹானேவின் இந்த ஓய்வு, ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு (PC-PTI) மற்றொரு சவாலாக அமைந்துள்ளது. ஏனென்றால், கடந்த இரண்டு சீசன்களாக அஜிங்க்யா ரஹானே இந்த அணியை வழிநடத்தி வந்தார். தற்போது ரஹானே தனது ஓய்வை அறிவித்துள்ளதால், ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக கேகேஆர் அணிக்கு ஒரு புதிய கேப்டனைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கனவே மோசமான ஆட்டத்திறனால் பாதிக்கப்பட்டுள்ள கேகேஆர் அணிக்கு, ஒரு திறமையான கேப்டன் தேவை. எனவே, கேகேஆர் யாரை கேப்டனாக நியமிக்கும் என்பதே கேள்வியாக உள்ளது.




ஷ்ரேயஸ் ஐயர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஐபிஎல் 2025-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அஜிங்க்யா ரஹானே தலைமை தாங்கினார். ரஹானேவின் தலைமையில் கேகேஆரின் செயல்பாடு கலவையாக இருந்தது. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மொத்த 26 போட்டிகளில், அந்த அணி 14 போட்டிகளில் தோல்வியும், 11 போட்டிகளில் வெற்றியும் பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. அவரது கேப்டன்சியின் கீழ் கேகேஆரின் வெற்றி சதவீதம் 42.3 சதவீதமாக இருந்தது.
புதிய கேப்டன் யார்..?
தற்போது புதிய கேப்டனைத் தேடிக்கொண்டிருக்கும் கேகேஆர் அணி, இந்தப் பொறுப்பை ஏற்கனவே உள்ள வீரரிடம் ஒப்படைக்குமா அல்லது புதிய வீரரிடம் ஒப்படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது, அணியில் உள்ள வீரர்களில் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருக்கும் ஒரே வீரர் ரிங்கு சிங். இருப்பினும், அவரும் தற்போது ஃபார்மில் இல்லை. அதனால், இந்திய அணியில் அவரது இடமும் உறுதியாக இல்லை. இருப்பினும், தற்போது கேகேஆர் அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரிங்கு சிங், கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார். மேலும், கேப்டனாக அணியை வழிநடத்திய அனுபவமும் ரிங்குவுக்கு உண்டு. ஆனால், அந்தப் போட்டியில் அவரால் கொல்கத்தா அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தர முடியவில்லை.
ALSO READ: 278வது கேப்.. ஓய்வு பெற்றது ஏன்..? காரணத்தை விளக்கும்போது கண்கலங்கிய ரஹானே!
கேப்டன் பதவிக்கு கேகேஆர் அணிக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, ஐபிஎல் 2027 ஏலத்தில் கேப்டனாக அனுபவமிக்க ஒரு வீரரை ஏலம் எடுப்பது. இல்லையெனில், அவர்கள் டிரேட் விண்டோ மூலம் கேப்டன் பதவிக்கு ஒரு மாற்று வீரரைக் கண்டுபிடிக்க வேண்டும். தற்போது, டிரேட் விண்டோவில் ஹர்திக் பாண்டியா பெயர் பேசப்பட்டு வருகிறது.