AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2027: சிஎஸ்கே அதிரடி வீரரை குறிவைத்த எல்எஸ்ஜி.. பரிமாற்றமாக இந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளரா?

Chennai Super Kings: ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக, பங்கேற்கும் 10 அணிகளும் தங்கள் வீரர் பட்டியலை வலுப்படுத்தத் தயாராகி வருகின்றன. இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான சாத்தியமான வீரர் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

IPL 2027: சிஎஸ்கே அதிரடி வீரரை குறிவைத்த எல்எஸ்ஜி.. பரிமாற்றமாக இந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளரா?
உர்வில் படேல் - முகமது ஷமிImage Source: X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jul 2026 16:23 PM IST

ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு முன்னதாக, வீரர் பரிமாற்றம் குறித்து அணி உரிமையாளர்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தகவல்களின்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு ஒரு சிறப்பு சலுகையை அனுப்பியுள்ளது. குஜராத்தின் மெஹ்சானாவைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க விரும்பும் எல்.எஸ்.ஜி, அதற்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளரை பரிமாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இடையே நடைபெறும் பரிமாற்றம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தோனி கையில் சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வு.. உற்றுநோக்கும் ரசிகர்கள்..!

ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக, பங்கேற்கும் 10 அணிகளும் தங்கள் வீரர் பட்டியலை வலுப்படுத்தத் தயாராகி வருகின்றன. இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான சாத்தியமான வீரர் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. கிடைத்த தகவல்களின்படி, குஜராத்தின் மெஹ்சானாவைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் உர்வில் பட்டேலை தங்கள் அணியில் சேர்ப்பதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அணுகியுள்ளது. உர்வில் பட்டேலின் அதிரடியான பேட்டிங்கைக் கருத்தில் கொண்டு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய வீரராகக் கருதுகிறது.

உர்வில் படேல் மீது எதிர்பார்ப்பு ஏன்..?

ஐபிஎல் 2025 ஏலத்தில் உர்வில் பட்டேலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. 2025-ல் அவருக்குக் குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. ஆனால், ஐபிஎல் 2026-ல் ஆயுஷ் மத்ரே இல்லாத நிலையில் கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். உர்வில் படேல் 3-வது இடத்தில் பேட்டிங் செய்து, ஆக்ரோஷமாக ரன்களைக் குவித்தார். தனது ஸ்டிரைக் ரேட் மற்றும் வேகப்பந்து வீச்சு மூலம் அவர் தனது திறமையை நிரூபித்தார். தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தங்களது டாப் ஆர்டரை வலுப்படுத்த அவரை அணியில் சேர்க்க விரும்புகிறது.

ALSO READ: சென்னைக்கு வரும் ஹர்திக்.. மும்பைக்கு யார்? சிஎஸ்கே – மும்பை இடையே பரிமாற்றமா?

மறுபுறம், இந்த பரிமாற்றத்தில் முகமது ஷமியின் பெயரும் அடிபட்டுள்ளது. சிஎஸ்கே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், அனுபவம் வாய்ந்த ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை பெறும். அதே நேரத்தில் எல்எஸ்ஜி குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளம் திறமையான பேட்ஸ்மேன் உர்வில் படேலை பெறும் வாய்ப்பைப் பெறும். இருப்பினும், இந்த பரிமாற்றம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Follow Us