Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
IPL

IPL

இந்தியன் பிரீமியர் லீக் என்பது ஒரு தொழில்முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியாகும். இது இந்தியாவில் இருக்கும் 10 முக்கிய நகரங்களில் இருந்து பத்து அணிகள் களமிறங்கி விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பை இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கி தற்போது 18வது சீசனை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் என்பது மிக முக்கியமானது. இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏற்கெனவே தொடங்கி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தங்களுக்கு பிடித்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தங்களது முழு ஆதவரையும் அளித்து வருகின்றனர். இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் போட்டி தொடங்கிய நாள் முதலே இருந்து வருகிறது. மாற்றங்களுடன் பல உலக சாதனைகளும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அப்டேட்களை இங்கு படிக்கலாம்

Read More

Champions League T20 Returns: புதிய பெயரில் மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20.. எப்போது, எங்கு தெரியுமா?

Global Cricket's Comeback: 2026 ஆம் ஆண்டில், சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் "உலக கிளப் சாம்பியன்ஷிப்" என்ற புதிய பெயரில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் உள்ளிட்ட உலகின் முன்னணி டி20 லீக்குகளின் சாம்பியன் அணிகள் இதில் பங்கேற்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியின் மறுதோற்றம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் போட்டி எப்போது துவங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026: சிஎஸ்கேக்கு செல்லும் சஞ்சு.. முக்கிய நிர்வாகி கொடுத்த சூப்பர் அப்டேட்!

Sanju Samson Trade Rumors: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2026 ஐபிஎல் சீசனுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது. கடந்த சீசனில் ஏமாற்றம் அடைந்த அணி, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சனை தங்களது அணியில் சேர்க்க ஆர்வமாக உள்ளது.

IPL 2026: சஞ்சு சாம்சனை எடுக்க திட்டம்! அஸ்வினை விட்டுக்கொடுக்கிறதா சிஎஸ்கே..? வெளியான தகவல்!

Chennai Super Kings Trade Rumors: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனுக்காக ஒரு பெரிய வர்த்தகத்தைத் திட்டமிட்டு வருகிறது. சஞ்சு சாம்சனைப் பெறுவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கூடுதல் தொகையை வழங்க CSK திட்டமிடுகிறது எனக் கூறப்படுகிறது. சிவம் துபே இந்த பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை. இந்த வர்த்தகம் இரு அணிகளின் அமைப்பிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சாம்சனின் வருகை CSK-வின் பேட்டிங்கை வலுப்படுத்தும்.

RCB Victory Parade: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் பறிபோன உயிர்கள்.. பிசிசிஐ கடும் கட்டுப்பாடு விதிப்பு!

IPL Safety Guidelines: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பில் ஏற்பட்ட துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பிசிசிஐ 3 பேர் கொண்ட குழுவை அமைத்து புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது. இனிமேல், வெற்றி கொண்டாட்டங்களை 3-4 நாட்களுக்குப் பிறகுதான் நடத்த அனுமதி, முறையான அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் பொருந்தும்.

Ravichandran Ashwin Documentary: சிஎஸ்கே வெளியிடும் அஸ்வினின் ஆவணப்படம்! காதல் கதையை பகிர்ந்த அஸ்வினின் மனைவி!

Ashwin Cricket Documentary Trailer: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவணப்படத்தின் ட்ரெய்லர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த அரிய காட்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அஸ்வினின் மனைவி, பெற்றோர் ஆகியோர் அவரது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசியுள்ளனர். இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு ஆவணப்படம் ஜூன் 19, 2025 அன்று வெளியாகவுள்ளது.

Digvesh Rathi: 5 பந்துகளில் 5 விக்கெட்கள்! உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் கலக்கிய திக்வேஷ் ரதி..!

Digvesh Rathi's 5 Wickets in 5 Balls: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, உள்ளூர் டி20 போட்டியில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் சிறப்பாக செயல்பட்ட இவரது இந்த சாதனை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரது 5/5 சாதனை, லசித் மலிங்காவின் 4/4 சாதனையை விஞ்சியது. இது திக்வேஷ் ரதியின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியாக உள்ளது.

Chennai Super Kings: ராஜஸ்தானில் ராஜநடை போதும்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?

Sanju Samson Leaving Rajasthan Royals: ஐபிஎல் 2025 முடிந்த பின்னரும், சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனாலேயே அவர் சிஎஸ்கேவில் இணையப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

BCCI New Rules: கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம்.. வெற்றி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா..? பிசிசிஐ முக்கிய ஆலோசனை!

Crowd Crush Deaths: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எதிர்கால ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஜூன் 14 அன்று நடைபெறும் பிசிசிஐ உச்சக் கவுன்சில் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Royal Challengers Bengaluru: ஆர்சிபி அணியை வாங்குகிறாரா கர்நாடகா துணை முதல்வர்..? தீயாய் பரவும் செய்தி..!

Karnataka Deputy CM Shivakumar: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, RCB அணியை துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வாங்குவதாக வந்த வதந்திகளை அவர் மறுத்துள்ளார். சிவக்குமார் தனது அறிக்கையில், அவர் RCB அணியில் எவ்வித ஈடுபாடும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

Nehal Wadhera: பஞ்சாப் தோல்விக்கு காரணம் நான்தான்.. புலம்பி தள்ளிய நேஹல் வதேரா!

Punjab Kings IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் தோல்விக்கு நேஹல் வதேரா தன்னை குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது மெதுவான ஆட்டத்தால் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும், சிறப்பாக ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், சீசன் முழுவதும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB For Sale: அதிக தொகைக்கு விலை நிர்ணயம்.. சாம்பியன் ஆர்சிபி விற்கப்படுகிறதா..?

IPL Team Sale: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணி, 2 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ. 17,000 கோடி) விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக அமையும். முன்னர், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இந்த அணியை தற்போது டியாஜியோ நிர்வகிக்கிறது. 2008ல் 111.6 மில்லியன் டாலராக இருந்த அணியின் மதிப்பு, 13 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

RCB IPL 2025: கூட்ட நெரிசலில் பறிபோன உயிர்! ஆர்சிபி அணியை தடை செய்கிறதா பிசிசிஐ..?

RCB IPL Victory Parade Tragedy: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் RCB மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசிஐ, RCB அணியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க உள்ளது. தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Shashank Singh: ஷ்ரேயாஸ் என்னை அடித்திருக்க வேண்டும்.. புலம்பிய ஷஷாங்க் சிங்..!

Shreyas Iyer Scolds Shashank Singh: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டித் தகுதிச் சுற்றில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங்கை கடுமையாகத் திட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. முக்கியமான தருணத்தில் ஷஷாங்க் சிங்கின் கவனக்குறைவு காரணமாக இது நடந்தது. இருப்பினும், பின்னர் இருவரும் இரவு உணவு சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்… ஆர்சிபி வெற்றி – விஜய் மல்லையாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Vijay Mallya RCB Tweet : ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பெங்களூரு விபத்து : ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு

Chinnaswamy Stadium Stampede : ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் ஆர்சிபி அணியின் மீதும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மீதும் காவல்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அனுமதி பெறாமல் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.