IPL
இந்தியன் பிரீமியர் லீக் என்பது ஒரு தொழில்முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியாகும். இது இந்தியாவில் இருக்கும் 10 முக்கிய நகரங்களில் இருந்து பத்து அணிகள் களமிறங்கி விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பை இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கி தற்போது 18வது சீசனை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் என்பது மிக முக்கியமானது. இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏற்கெனவே தொடங்கி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தங்களுக்கு பிடித்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தங்களது முழு ஆதவரையும் அளித்து வருகின்றனர். இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் போட்டி தொடங்கிய நாள் முதலே இருந்து வருகிறது. மாற்றங்களுடன் பல உலக சாதனைகளும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அப்டேட்களை இங்கு படிக்கலாம்
RCB: விற்பனையில் ஆர்சிபி.. வாங்க போட்டியிடும் அதானி குழுமம்.. விலை இவ்வளவா..?
RCB For Sale: ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ரஜத் படிதார் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை, மும்பைக்கு பிறகு இந்த அணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமூக ஊடகங்களில் கூட, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஆர்சிபி மற்ற அணிகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Oct 17, 2025
- 21:37 pm IST
Virat Kohli : ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த கோலி.. ஆர்சிபி அணிக்காக விளையாட மாட்டாரா?
Royal Challengers Bengaluru: கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டத்தில் இருந்து கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி, ஐபிஎல் 2026லிலும் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்றும், அணியை விட்டுப் பிரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Mukesh Kannan
- Updated on: Oct 13, 2025
- 23:12 pm IST
Chennai Super Kings: 5 வீரர்களை விடுவிக்க திட்டமிடும் சிஎஸ்கே… இந்த வெளிநாட்டு வீரரும் வெளியேறுகிறாரா..?
IPL 2026: கடந்த 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் செயல்திறன் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மோசமாக அமைந்தது. இதில் களமிறங்கிய டெவன் கான்வே, தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திரிபாதி தொடர்ந்து சொதப்பினர்.
- Mukesh Kannan
- Updated on: Oct 11, 2025
- 15:54 pm IST
MS Dhoni Madurai Visit: புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா.. மதுரை மகனாக வரும் எம்.எஸ்.தோனி..!
MS Dhoni Inaugurate Cricket Stadium in Madurai: மகேந்திர சிங் தோனி மதியம் 1.25 மணிக்கு வேலம்மாள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி முதல் 4 மணிக்குள் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டு, தோனி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Mukesh Kannan
- Updated on: Oct 9, 2025
- 14:34 pm IST
BCCI Election 2025: பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர்..? முக்கிய பதவிகளுக்கான தேர்தல் எப்போது?
Roger Binny's BCCI Exit: ரோஜர் பின்னி 70 வயது எல்லை காரணமாக பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் அடுத்த தலைவராக இருக்கலாம் என்ற வதந்திகள் பரவினாலும், அவரது நிறுவனம் அதனை மறுத்துள்ளது. 2025 செப்டம்பர் 28 அன்று பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Sep 12, 2025
- 08:22 am IST
IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் காத்திருக்கும் ட்விஸ்ட்! மாற்று வீரர்களின் எதிர்காலம் என்ன? தக்கவைக்கப்படுவார்களா?
IPL Replacement Players: 2025 ஐபிஎல் சீசனில் பல அணிகள் காயம் மற்றும் பிற காரணங்களால் மாற்று வீரர்களைச் சேர்த்தன. ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரெவிஸ், ஹர்ஷ் துபே, மயங்க் அகர்வால், உர்வில் படேல் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்களது அணிகள் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
- Mukesh Kannan
- Updated on: Sep 8, 2025
- 15:07 pm IST
BCCI elections 2025: அடுத்த பிசிசிஐ தலைவர் யார்..? விரைவில் தேர்தல்! ராஜீவ் சுக்லா போட்டியா?
Upcoming BCCI Elections: பிசிசிஐயில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் தலைவர் மற்றும் ஐபிஎல் தலைவர் பதவிகள் முக்கிய கவனத்தை ஈர்க்கின்றன. ரோஜர் பின்னியின் ஓய்வுக்குப் பின், ராஜீவ் சுக்லா தற்காலிகத் தலைவராக உள்ளார். அருண் துமாலின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதால், அவர் 3 ஆண்டு கூலிங்-ஆஃப் காலத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்.
- Mukesh Kannan
- Updated on: Sep 4, 2025
- 10:24 am IST
Virat Kohli: 11 ரசிகர்களின் மரணம்! 20 பேர் காயம்! 3 மாதங்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த விராட் கோலி
RCB's IPL Victory Turns Tragic: 2025 ஜூன் 3ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றிக்குப் பின் ஏற்பட்ட ரசிகர் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 3 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கும், இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Sep 3, 2025
- 17:16 pm IST
Harbhajan Singh: லலித் மோடி வெளியிட்ட வீடியோ.. கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!
Lalit Modi's IPL Video Leak: 2008 ஐபிஎல் போட்டியின் போது ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்த வீடியோவை லலித் மோடி வெளியிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பழையது என்றாலும், மீண்டும் வெளிச்சத்திற்கு வந்ததால் ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்தின் மனைவி லலித் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Sep 1, 2025
- 19:38 pm IST
Rajasthan Royals Captain: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ஆக பிரிந்ததா..? யார் அடுத்த கேப்டன்..?
Sanju Samson: ராஜஸ்தான் ராயல்ஸின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விலகியதைத் தொடர்ந்து, அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது. சஞ்சு சாம்சன், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன. சாம்சனும் கேப்டன் பதவியில் தொடர விரும்புவது குறிப்பிடத்தக்கது.
- Mukesh Kannan
- Updated on: Aug 31, 2025
- 12:46 pm IST
Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகிய டிராவிட்.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?
Rahul Dravid Exits Rajasthan Royals: ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 2025 ஐபிஎல் சீசனில் அவரது பயிற்சியின் கீழ் அணி ஏமாற்றமளித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டிராவிட்டுக்கு ஒரு உயர் பதவியை வழங்கியதாகவும், அவர் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Aug 30, 2025
- 16:44 pm IST
Sreesanth-Harbhajan Fight: 17 ஆண்டுகளுக்குப் பிறகு! வைரலாகும் ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் சண்டை வீடியோ.. கேள்வி எழுப்பிய ஸ்ரீசாந்தின் மனைவி..!
Sreesanth Wife Statement: 2008 ஐபிஎல் போட்டியில் ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் இடையே நடந்த சண்டையின் வீடியோவை லலித் மோடி மற்றும் மைக்கேல் கிளார்க் வெளியிட்டதால் பழைய சர்ச்சை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, இந்தச் செயலைக் கண்டித்துள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Aug 30, 2025
- 11:03 am IST
தோனி விளையாடுவது ஆச்சரியம்… ஐபிஎல்லில் இருந்து விலகுவதற்கு காரணம்…. – அஸ்வின் பகிர்ந்த தகவல்
Ravichandran Ashwin : தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் அவர் தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Aug 29, 2025
- 17:26 pm IST
RCB Breaks Silence: 3 மாத மௌனத்தை கலைத்த ஆர்சிபி.. உயிரிழந்த ரசிகர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!
Royal Challengers Bengaluru: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, ஜூன் 4, 2025 அன்று நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் மூன்று மாத மௌனத்திற்குப் பிறகு, "RCB கேர்ஸ்" என்ற புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், சம்பவத்தில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உதவி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Aug 28, 2025
- 18:39 pm IST
Ashwin IPL Records: ஐபிஎல்லிலும் ஆஹா! ஓஹோ! அஸ்வின் படைத்த சாதனைகள் இவ்வளவா..?
Ravichandran Ashwin Retires: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்த 5 முக்கிய சாதனைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
- Mukesh Kannan
- Updated on: Aug 27, 2025
- 18:51 pm IST