
IPL
இந்தியன் பிரீமியர் லீக் என்பது ஒரு தொழில்முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியாகும். இது இந்தியாவில் இருக்கும் 10 முக்கிய நகரங்களில் இருந்து பத்து அணிகள் களமிறங்கி விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பை இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கி தற்போது 18வது சீசனை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் என்பது மிக முக்கியமானது. இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏற்கெனவே தொடங்கி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தங்களுக்கு பிடித்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தங்களது முழு ஆதவரையும் அளித்து வருகின்றனர். இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் போட்டி தொடங்கிய நாள் முதலே இருந்து வருகிறது. மாற்றங்களுடன் பல உலக சாதனைகளும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அப்டேட்களை இங்கு படிக்கலாம்
Kohli-Dhoni Fan War: தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்.. திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்.. என்ன நடந்தது..?
Harbhajan Singh's Dhoni Remark: முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், தோனியின் ரசிகர்கள் மட்டுமே உண்மையான ரசிகர்கள் என்று கூறியதால், கோலி-தோனி ரசிகர்கள் இடையே சமூக ஊடகங்களில் பெரும் சண்டை மூண்டது. #ShameOnDeshdrohiDhoni மற்றும் #NationalShameKohli என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின. இந்த சர்ச்சை ஐபிஎல் 2025 போட்டிகளின் பின்னணியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: May 18, 2025
- 21:40 pm
RR vs PBKS: போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Punjab Kings Beat Rajasthan Royals: ஐபிஎல் 2025ன் 59வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி 209 ரன்களில் சுருண்டது. நேஹல் வதேரா (70 ரன்கள்) மற்றும் ஹர்பிரீத் ப்ரார் (3 விக்கெட்டுகள்) பஞ்சாப் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் பிளேஆஃப் தகுதிக்கு ஒரு படி நெருங்கியுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: May 18, 2025
- 20:36 pm
Royal Challengers Bengaluru: ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. ஆர்சிபி பிளே ஆஃப்க்கு செல்லுமா இன்று..?
IPL 2025 Playoff Race: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 பிளேஆஃப் தகுதி மே 18 அன்று தீர்மானிக்கப்படும். 17 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தாலும், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்து ஆர்சிபி-யின் நிலை மாறலாம். ராஜஸ்தான்-பஞ்சாப் மற்றும் குஜராத்-டெல்லி ஆகிய போட்டிகளின் முடிவுகள் ஆர்சிபி-யின் பிளேஆஃப் பயணத்தை நிர்ணயிக்கும். மழையால் ஏற்பட்ட புள்ளி பகிர்வு ஆர்சிபி-க்கு சாதகமாக அமையலாம் அல்லது பாதகமாக அமையலாம்.
- Mukesh Kannan
- Updated on: May 18, 2025
- 14:50 pm
IPL 2025: பிளே ஆஃப் கனவில் குஜராத்.. தடுத்து நிறுத்துமா டெல்லி..? மழைக்கு வாய்ப்பா..?
Delhi Capitals vs Gujarat Titans: மே 18, 2025 அன்று டெல்லியில் நடைபெறும் IPL 2025 இன் 60வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானம் மற்றும் இரு அணிகளுக்கிடையேயான சமமான ஹெட்-டு-ஹெட் சண்டை ஆகியவை இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்கள் உள்ளன. பிளே-ஆஃப் தகுதிக்கான போராட்டத்தில் இந்தப் போட்டி மிக முக்கியமானதாகும்.
- Mukesh Kannan
- Updated on: May 18, 2025
- 11:28 am
IPL 2025: கௌரவத்திற்காக களமிறங்கும் ராஜஸ்தான்.. பிளே ஆஃப் பயத்தில் பஞ்சாப்.. யாருக்கு வெற்றி?
Rajasthan Royals vs Punjab Kings: ஐபிஎல் 2025 சீசனின் 59வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மே 17 அன்று ஜெய்ப்பூரில் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் தகுதிக்காக வெற்றி தேவை. ராஜஸ்தான் ஏற்கனவே வெளியேறிவிட்டது. பிட்ச் தட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்-டு-ஹெட் சாதனையில் ராஜஸ்தான் முன்னிலையில் உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: May 18, 2025
- 08:00 am
RCB vs KKR: முதல் போட்டியில் தடைப்போட்ட மழை.. ஆர்சிபிக்கு அதிர்ஷ்டம்! கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் சிக்கல்!
RCB vs KKR Match Abandoned: ஐபிஎல் 2025 இல் பெங்களூருவில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 58வது போட்டி, தொடர்ந்து பெய்த மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால், பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடிய கொல்கத்தா அணிக்கு பெரும் அதிர்ச்சி. பெங்களூரு அணி ஏற்கனவே பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்டது. மழையால் டாஸ் கூட நடக்கவில்லை. கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் கனவு இந்த மழையால் சிதறியது.
- Mukesh Kannan
- Updated on: May 17, 2025
- 23:00 pm
IPL 2025: மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்.. ஆர்சிபிக்கு சாதகமா..?
Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders: ஐபிஎல் 2025 சீசனின் பெங்களூரு-கொல்கத்தா போட்டி கனமழையால் பாதிக்கப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால், RCB-க்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகரிக்கும் அதேவேளை, KKR-க்கு பிளே ஆஃப் நம்பிக்கை குறையும். மழை காரணமாக ஏற்படும் புள்ளிப் பகிர்வு இரண்டு அணிகளின் லீக் நிலையையும் பெரிதும் பாதிக்கும்.
- Mukesh Kannan
- Updated on: May 17, 2025
- 20:58 pm
Royal Challengers Bengaluru: இது நடந்தால் நான் இந்தியா வருவேன்… விராட் கோலிக்கு ஆதரவாக ஏபி டிவில்லியர்ஸ் குரல்..!
IPL 2025 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றால் இந்தியாவுக்கு வந்து ஸ்டேடியத்தில் இருப்பேன் என முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் விராட் கோலியுடன் கோப்பையை உயர்த்த விரும்புவதாகவும், பல ஆண்டுகளாக இந்த கனவை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். RCB அணி பிளே ஆஃப்களில் இடம் பிடிக்க இன்னும் ஒரு வெற்றி தேவையாக உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: May 17, 2025
- 20:03 pm
IPL 2025 Resumes: ஐபிஎல் 2025ல் மீண்டும் பரபரப்பு.. பைனலை இங்கே வையுங்க..! போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்!
IPL 2025 Final Venue: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025, மே 17 முதல் மீண்டும் தொடங்குகிறது. கொல்கத்தா இறுதிப் போட்டி இடம் மாற்றப்பட்டதால், ரசிகர்கள் ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம் முன் போராட்டம் நடத்தினர். புதிய அட்டவணைப்படி, இறுதிப் போட்டி ஜூன் 3 அன்று அகமதாபாத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
- Mukesh Kannan
- Updated on: May 17, 2025
- 15:19 pm
IPL 2025: இன்று முதல் மீண்டும் ஐபிஎல்.. பெங்களூரு – கொல்கத்தா மோதல்!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 போட்டிகள், மே 17 முதல் மீண்டும் தொடங்குகின்றன. பெங்களூருவில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களால், எஞ்சிய போட்டிகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: May 17, 2025
- 08:41 am
IPL 2025 : டெல்லி அணியில் மீண்டும் இணையும் முஸ்தஃபிஸூர்? வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவு என்ன?
Mustafizur Joins DC : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முஸ்தாஃபிஸூர் ரஹ்மான் மீதமுள்ள ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில் பங்கேற்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர் மே 18 முதல் 24, 2025 வரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக விளையாடவிருக்கிறார். அவரது வருகை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
- Karthikeyan S
- Updated on: May 16, 2025
- 22:11 pm
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம் – என்ன காரணம் தெரியுமா?
Starc Withdraws from IPL : டெல்லி கேப்பிடல்ஸை சேர்ந்த நட்சத்திர வீரரான மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் 2025 சீசனில் தொடரப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஐபிஎல் விதிகளின் படி அவர் ரூ.3.5 கோடிகளை இழக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
- Karthikeyan S
- Updated on: May 16, 2025
- 19:10 pm
IPL 2025 Resumes: ஐபிஎல்லில் அமலாகும் புதிய விதி.. மாற்று வெளிநாட்டு வீரர்களுக்கு லக்கா..? லாக்கா..?
IPL 2025 Player Availability: இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஒரு வாரம் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025, மே 17ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. சர்வதேச போட்டிகள் காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் போகலாம். புதிய விதிப்படி, இடைநிறுத்தத்திற்குப் பின் சேர்ந்த மாற்று வீரர்களை அடுத்த சீசனில் அணிகள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. இருப்பினும், ஒத்திவைப்புக்கு முன் சேர்ந்தவர்களை தக்க வைக்கலாம். பல முக்கிய வீரர்களின் வருகை சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: May 15, 2025
- 22:57 pm
Delhi Capitals: வங்கதேச வீரர் ஐபிஎல்லில் எதற்கு..? டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு..!
Mustafizur Rahman: டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் 2025க்காக வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை சேர்த்ததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க்கிற்கு பதிலாக சேர்க்கப்பட்ட முஸ்தாபிசுர், பின்னர் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாட UAE செல்வதாக அறிவித்தார். இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணியை பலர் விமர்சித்து #boycottdelhicapitals ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த சர்ச்சையின் பின்னணியை இங்கே காண்போம்.
- Mukesh Kannan
- Updated on: May 15, 2025
- 15:54 pm
Ayush Mhatre: சூர்யகுமார் யாதவ் இதை சொன்னார்..! சிஎஸ்கேவில் இனி என் கிரிக்கெட் வாழ்க்கை.. மனம் திறந்த ஆயுஷ் மத்ரே!
Chennai Super Kings: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏமாற்றம் அளித்தாலும், இளம் வீரர் ஆயுஷ் மத்ரே அசத்தலான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். 181.11 ஸ்ட்ரைக் ரேட்டில் 163 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் அவரை சென்னை அணியில் சேர்க்க பரிந்துரைத்தது குறித்தும், அவரது அனுபவம் குறித்தும் ஆயுஷ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
- Mukesh Kannan
- Updated on: May 15, 2025
- 11:37 am