Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
IPL

IPL

இந்தியன் பிரீமியர் லீக் என்பது ஒரு தொழில்முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியாகும். இது இந்தியாவில் இருக்கும் 10 முக்கிய நகரங்களில் இருந்து பத்து அணிகள் களமிறங்கி விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பை இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கி தற்போது 18வது சீசனை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் என்பது மிக முக்கியமானது. இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏற்கெனவே தொடங்கி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தங்களுக்கு பிடித்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தங்களது முழு ஆதவரையும் அளித்து வருகின்றனர். இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் போட்டி தொடங்கிய நாள் முதலே இருந்து வருகிறது. மாற்றங்களுடன் பல உலக சாதனைகளும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அப்டேட்களை இங்கு படிக்கலாம்

Read More

Chennai Super Kings: ராஜஸ்தானில் ராஜநடை போதும்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?

Sanju Samson Leaving Rajasthan Royals: ஐபிஎல் 2025 முடிந்த பின்னரும், சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனாலேயே அவர் சிஎஸ்கேவில் இணையப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

BCCI New Rules: கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம்.. வெற்றி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா..? பிசிசிஐ முக்கிய ஆலோசனை!

Crowd Crush Deaths: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எதிர்கால ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஜூன் 14 அன்று நடைபெறும் பிசிசிஐ உச்சக் கவுன்சில் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Royal Challengers Bengaluru: ஆர்சிபி அணியை வாங்குகிறாரா கர்நாடகா துணை முதல்வர்..? தீயாய் பரவும் செய்தி..!

Karnataka Deputy CM Shivakumar: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, RCB அணியை துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வாங்குவதாக வந்த வதந்திகளை அவர் மறுத்துள்ளார். சிவக்குமார் தனது அறிக்கையில், அவர் RCB அணியில் எவ்வித ஈடுபாடும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

Nehal Wadhera: பஞ்சாப் தோல்விக்கு காரணம் நான்தான்.. புலம்பி தள்ளிய நேஹல் வதேரா!

Punjab Kings IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் தோல்விக்கு நேஹல் வதேரா தன்னை குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது மெதுவான ஆட்டத்தால் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும், சிறப்பாக ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், சீசன் முழுவதும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB For Sale: அதிக தொகைக்கு விலை நிர்ணயம்.. சாம்பியன் ஆர்சிபி விற்கப்படுகிறதா..?

IPL Team Sale: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணி, 2 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ. 17,000 கோடி) விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக அமையும். முன்னர், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இந்த அணியை தற்போது டியாஜியோ நிர்வகிக்கிறது. 2008ல் 111.6 மில்லியன் டாலராக இருந்த அணியின் மதிப்பு, 13 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

RCB IPL 2025: கூட்ட நெரிசலில் பறிபோன உயிர்! ஆர்சிபி அணியை தடை செய்கிறதா பிசிசிஐ..?

RCB IPL Victory Parade Tragedy: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் RCB மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசிஐ, RCB அணியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க உள்ளது. தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Shashank Singh: ஷ்ரேயாஸ் என்னை அடித்திருக்க வேண்டும்.. புலம்பிய ஷஷாங்க் சிங்..!

Shreyas Iyer Scolds Shashank Singh: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டித் தகுதிச் சுற்றில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங்கை கடுமையாகத் திட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. முக்கியமான தருணத்தில் ஷஷாங்க் சிங்கின் கவனக்குறைவு காரணமாக இது நடந்தது. இருப்பினும், பின்னர் இருவரும் இரவு உணவு சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்… ஆர்சிபி வெற்றி – விஜய் மல்லையாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Vijay Mallya RCB Tweet : ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பெங்களூரு விபத்து : ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு

Chinnaswamy Stadium Stampede : ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் ஆர்சிபி அணியின் மீதும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மீதும் காவல்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அனுமதி பெறாமல் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு கூட்ட நெரிசல் விபத்து.. முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது காவல் நிலையத்தில் புகார்!

Bengaluru Stampede : பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

துயரத்தில் முடிந்த ஆர்சிபியின் வெற்றிக்கொண்டாட்டம் – சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?

Bengaluru Stampede: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக அந்த அணி வீரர்கள் சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோக்ததை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூருவில் ஆர்சிபி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி – பலர் படுகாயம்

RCB Victory Celebration Turns Tragic : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கொண்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

போலீசாரின் அனுமதி மறுப்பால் ஆர்சிபியின் பேரணி ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்

RCB Victory Parade Cancelled by Bengaluru Police : கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அந்த அணி பெங்களூரு நகரில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி பெங்களூரு நகர காவல்துறையினர் பேரணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

IPL 2025: காத்திருக்கும் ரசிகர்கள்.. பெங்களூவில் ஆர்சிபி வீரர்கள் வெற்றி அணிவகுப்பு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாட, பெங்களூரில் வெற்றி அணிவகுப்பு நடைபெற உள்ளது. விதான் சௌதா முதல் சின்னசாமி மைதானம் வரை 2.5 கி.மீ தூரம் அணிவகுப்பு செல்லும். 17 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி வெற்றி பெற்றது கர்நாடகாவில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

RCB Won the IPL Trophy : ‘ஆர்சிபிக்காக என் இளமை உட்பட அனைத்தையும் கொடுத்திருக்கிறேன்’ – உணர்ச்சிவசப்பட்ட விராட் கோலி

RCB Won the IPL Trophy: ஐபிஎல் வரலாற்றில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, ஆர்சிபி அணிக்காக தன் இளமையைக் கொடுத்திருப்பதாக உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!
பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!...
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?...
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!...
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்...
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!...
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!...
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?...
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!...
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு..
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.....
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்...