Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
IPL

IPL

இந்தியன் பிரீமியர் லீக் என்பது ஒரு தொழில்முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியாகும். இது இந்தியாவில் இருக்கும் 10 முக்கிய நகரங்களில் இருந்து பத்து அணிகள் களமிறங்கி விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பை இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கி தற்போது 18வது சீசனை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் என்பது மிக முக்கியமானது. இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏற்கெனவே தொடங்கி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தங்களுக்கு பிடித்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தங்களது முழு ஆதவரையும் அளித்து வருகின்றனர். இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் போட்டி தொடங்கிய நாள் முதலே இருந்து வருகிறது. மாற்றங்களுடன் பல உலக சாதனைகளும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அப்டேட்களை இங்கு படிக்கலாம்

Read More

Ravindra Jadeja: ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா நிபந்தனை.. கேப்டன் பதவியை வழங்குமா நிர்வாகம்..?

Rajasthan Royals: ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு அனுபவமிக்க வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜடேஜா அறிமுகமானார். இதனால், அணியுடன் நீண்டகால பந்தமும் உள்ளதால் இந்த கூட்டணி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026 Mini Auction: இந்தியாவில் இல்லை.. ஐபிஎல் 2026 மினி ஏலம் இங்குதான்.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

IPL 2026 Mini Auction Venue: ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒரு பெரிய வர்த்தக சாளரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம். கிரிக்பஸ் அறிக்கையின்படி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனுக்கு ஈடாக சஞ்சு சாம்சனுக்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது.

IPL 2026: ஐபிஎல் 2026க்கான ஏலம் எப்போது, எங்கு நடைபெறும்? வெளியான தகவல்..!

IPL 2026 Auction: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் 2025ம் ஆண்டு கடைசி 2 இடத்தைப் பிடித்தன. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் பாதியில் வெளியேறிய நிலையில், எம்எஸ் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

IPL 2026: டிசம்பரில் மினி ஏலம்.. சிஎஸ்கே அணி இந்த 4 வீரர்களை விடுக்கிறதா..?

Chennai Super Kings: ஐபிஎல் 19வது பதிப்பு அடுத்த ஆண்டு 2026 மார்ச் மாதம் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலம் 2025 டிசம்பர் மாத நடுப்பகுதியில் (இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம்) நடைபெறும். இது இந்தியாவிற்கு வெளியே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

IPL 2026: புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்த கொல்கத்தா அணி.. களமிறங்கும் அபிஷேக் நாயர்!

KKR's Head Coach Abhishek Nayar: 42 வயதான அபிஷேக் நாயர் தனது தனித்துவமான பயிற்சி பாணிக்கு பெயர் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் நாயர் கே.கே.ஆர் நிர்வாகத்தில் இடம்பெறவில்லை என்றாலும், ஐபிஎல் 2025 இன் போது இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றினார்.

Sanju Samson: சாம்சனை சிஎஸ்கே கேப்டனாக தோனி மாற்றுவாரா? ஒப்பந்தம் குறித்த முக்கிய அப்டேட்!

Chennai Super Kings: சஞ்சு சாம்சன் 149 இன்னிங்ஸ்களில் 26 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களுடன் 4,200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியபோது, சஞ்சு ​​சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணிக்கு நிலையான தலைமையை வழங்கி வருகிறார். 

RCB: விற்பனையில் ஆர்சிபி.. வாங்க போட்டியிடும் அதானி குழுமம்.. விலை இவ்வளவா..?

RCB For Sale: ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ரஜத் படிதார் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை, மும்பைக்கு பிறகு இந்த அணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமூக ஊடகங்களில் கூட, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஆர்சிபி மற்ற அணிகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது.

Virat Kohli : ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த கோலி.. ஆர்சிபி அணிக்காக விளையாட மாட்டாரா?

Royal Challengers Bengaluru: கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டத்தில் இருந்து கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி, ஐபிஎல் 2026லிலும் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்றும், அணியை விட்டுப் பிரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chennai Super Kings: 5 வீரர்களை விடுவிக்க திட்டமிடும் சிஎஸ்கே… இந்த வெளிநாட்டு வீரரும் வெளியேறுகிறாரா..?

IPL 2026: கடந்த 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் செயல்திறன் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மோசமாக அமைந்தது. இதில் களமிறங்கிய டெவன் கான்வே, தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திரிபாதி தொடர்ந்து சொதப்பினர்.

MS Dhoni Madurai Visit: புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா.. மதுரை மகனாக வரும் எம்.எஸ்.தோனி..!

MS Dhoni Inaugurate Cricket Stadium in Madurai: மகேந்திர சிங் தோனி மதியம் 1.25 மணிக்கு வேலம்மாள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி முதல் 4 மணிக்குள் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டு, தோனி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI Election 2025: பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர்..? முக்கிய பதவிகளுக்கான தேர்தல் எப்போது?

Roger Binny's BCCI Exit: ரோஜர் பின்னி 70 வயது எல்லை காரணமாக பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் அடுத்த தலைவராக இருக்கலாம் என்ற வதந்திகள் பரவினாலும், அவரது நிறுவனம் அதனை மறுத்துள்ளது. 2025 செப்டம்பர் 28 அன்று பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ளது.

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் காத்திருக்கும் ட்விஸ்ட்! மாற்று வீரர்களின் எதிர்காலம் என்ன? தக்கவைக்கப்படுவார்களா?

IPL Replacement Players: 2025 ஐபிஎல் சீசனில் பல அணிகள் காயம் மற்றும் பிற காரணங்களால் மாற்று வீரர்களைச் சேர்த்தன. ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரெவிஸ், ஹர்ஷ் துபே, மயங்க் அகர்வால், உர்வில் படேல் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்களது அணிகள் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

BCCI elections 2025: அடுத்த பிசிசிஐ தலைவர் யார்..? விரைவில் தேர்தல்! ராஜீவ் சுக்லா போட்டியா?

Upcoming BCCI Elections: பிசிசிஐயில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் தலைவர் மற்றும் ஐபிஎல் தலைவர் பதவிகள் முக்கிய கவனத்தை ஈர்க்கின்றன. ரோஜர் பின்னியின் ஓய்வுக்குப் பின், ராஜீவ் சுக்லா தற்காலிகத் தலைவராக உள்ளார். அருண் துமாலின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதால், அவர் 3 ஆண்டு கூலிங்-ஆஃப் காலத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்.

Virat Kohli: 11 ரசிகர்களின் மரணம்! 20 பேர் காயம்! 3 மாதங்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த விராட் கோலி

RCB's IPL Victory Turns Tragic: 2025 ஜூன் 3ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றிக்குப் பின் ஏற்பட்ட ரசிகர் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 3 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கும், இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.

Harbhajan Singh: லலித் மோடி வெளியிட்ட வீடியோ.. கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!

Lalit Modi's IPL Video Leak: 2008 ஐபிஎல் போட்டியின் போது ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்த வீடியோவை லலித் மோடி வெளியிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பழையது என்றாலும், மீண்டும் வெளிச்சத்திற்கு வந்ததால் ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்தின் மனைவி லலித் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.