AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காலை உணவுத் திட்டம்.. இனி 8ஆம் வகுப்பு வரை.. எப்போது முதல்? முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

காலை உணவுத் திட்டம்.. இனி 8ஆம் வகுப்பு வரை.. எப்போது முதல்? முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Jun 2026 19:06 PM IST

ஜூன் 15, 2026: தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரையில் விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்:

இந்த சூழலில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூகச் சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிர்ப்பு.. திருப்பத்தூரில் மறு வாக்கு எண்ணிக்கை.. உயர்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் மனு தாக்கல்!

‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றிற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்:

மேலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களின் (One Stop Centre) செயல்பாடுகள், தத்தெடுப்பு மையங்கள், மகளிர், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்களிடம் தடையின்றியும் துரிதமாகவும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகாத வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், அந்தப் பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

செப்டம்பர் 17ஆம் தேதி முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்:

மேலும், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் விரிவாக்கம் செய்வதற்காக, தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி இத்திட்டத்தை முதற்கட்டமாக தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us