AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து குவியும் மக்கள்.. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Kilambakkam Bus Terminus: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகக் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாகப் பல நூறு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து குவியும் மக்கள்.. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Sep 2026 13:27 PM IST

சென்னை, செப்டம்பர் 14: வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டுச் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பெருமளவிலான பொதுமக்கள் பயணம் மேற்கொள்வது வழக்கம். விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் சென்னை நகருக்குத் திரும்பும்போது, தென் சென்னை எல்லையில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கடும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இத்தகைய தொடர் விடுமுறைக்குப் பிந்தைய பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு சிரமமின்றிச் சென்றடையவும் போக்குவரத்துத் துறை சார்பாகப் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!

சென்னைக்குக் கூடுதல் பேருந்துகள்:

அந்த வகையில், வெளியூர்களில் இருந்து அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாகக் கிளாம்பாக்கம் வந்து சேரும் பயணிகள், அங்கிருந்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு ஏதுவாகக் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்குப் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்துத் துறை இந்த உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

பயணிகள் நலன் கருதி தொடர் கண்காணிப்பு:

கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி, மத்திய ரயில் நிலையம், பாரிமுனை உள்ளிட்ட முக்கிய நகர்ப்புறப் பகுதிகளுக்கு வழக்கமான இடைவெளிகளைத் தாண்டி அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம் பயணிகள் எவ்வித அசௌகரியமும் இன்றி விரைவாகத் தங்களது வீடுகளுக்கும் பணிபுரியும் இடங்களுக்கும் சென்றடைய முடிவதாகப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: இடைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டி – வீரபாண்டியன் அறிவிப்பு

கிளாம்பாக்கத்தில் பேருந்து சேவை சீரமைப்பு:

வழக்கம் போலக் கிளாம்பாக்கத்திலிருந்து 47 வழித்தடங்களில் இயக்கப்படும் 508 மாநகரப் பேருந்துகளுடன் (MTC) கூட்ட நெரிசலைக் சமாளிக்கச் செப்டம்பர் 14 மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் 50 கூடுதல் பேருந்துகள் மூலம் 400 நடைகளும் (Trips), செப்டம்பர் 15 அதிகாலை முதல் கூடுதலாக 150 சிறப்பு நடைகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு மட்டும் பயணிகளை ஏற்றி வரச் சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், கிண்டி, சென்னை சென்ட்ரல் மற்றும் பாரிமுனை போன்ற முக்கிய இடங்களுக்கு விரைவாகச் செல்ல ஏதுவாக இந்த உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேருந்து நிலையப் பகுதியில் நேரடியாக முகாமிட்டுப் பயணிகளின் வருகையைக் தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளைத் தடையின்றி இயக்கி வருகின்றமையால் பயணிகள் பெரும் சிரமமின்றிச் சென்னை நகருக்குள் பயணித்து வருகின்றனர்.

Follow Us