AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“இடைத்தேர்தலில் தேமுதிக ஆதரவு யாருக்கு?”.. அதிரடியாக முடிவை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்!!

Premalatha Vijayakanth Supports DMK: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்குத் தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும், விசிக தொடுத்த குற்றச்சாட்டுகள் குறித்து செப். 16-ல் பதிலளிப்பதாகவும் அவர் கூறினார்.

“இடைத்தேர்தலில் தேமுதிக ஆதரவு யாருக்கு?”.. அதிரடியாக முடிவை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்!!
பிரேமலதா விஜயகாந்த்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 14 Sep 2026 11:41 AM IST

சென்னை, செப்டம்பர் 14: தமிழ்நாடு அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடும் பிரச்சாரத் திட்டங்களும் முக்கியக் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக களமிறக்கியுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்துத் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், விநாயகர் சதுர்த்தி மற்றும் கட்சித் தொடக்க நாளை முன்னிட்டுத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல முக்கிய அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மேலும் படிக்க: “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!

இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு:

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சுகன்யா ஆகிய இருவரையும் திமுக சார்பில் களமிறக்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்மைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார். திமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதால், இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் தேமுதிகவின் 100 சதவீத ஆதரவு முழுமையாக இருக்கும் என உறுதி அளித்ததாகக் கூறினார். மேலும், தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து ஆசி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வருமாறு கேட்டுக்கொண்டதாகவும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அழைப்பின் பேரில் நிச்சயம் களமிறங்கிப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு:

விவசாய நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டத்திருத்தம் மற்றும் பரந்தூர் விமான நிலையம், கடற்கரை அருகே தலைமைச் செயலகம் அமைப்பது போன்ற திட்டங்களுக்கு எழும் எதிர்ப்புகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், மக்களுக்காகக் கொண்டுவரப்படும் எந்தவொரு திட்டமும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றார். மக்கள் விரும்பும் திட்டங்களே வெற்றிபெறும் என்றும், மக்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் திணிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்துக் கேட்கப்பட்டபோது, “முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த வெளிநாட்டுப் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்” எனத் சுருக்கமாகப் பதிலளித்தார்.

மேலும் படிக்க: “ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!

செப்டம்பர் 16 தேமுதிக ஆலோசனை கூட்டம்:

திமுக தங்களைக் கைவிட்டுவிட்டது என்றும், புதிதாகக் கூட்டணிக்கு வந்த தேமுதிகவிற்கு அதிகத் தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் கட்சியின் முக்கிய நன்னாள் என்பதால் அனைவரும் சந்தோஷமாக இருப்போம். வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி தலைமைக்கழகத்தில் தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் செய்தியாளர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாகப் பதிலளிக்கிறேன்” எனக் கூறி முடித்தார்.

Follow Us