தமிழக காவல் துறை ரூ.212 கோடியில் நவீன மயமாக்குதல்.. ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள்.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்!
Tamil Nadu Police Deaprtment Announcements : தமிழக காவல் துறைக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல் அமைச்ச ர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இதில், என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
தமிழக காவல் துறைக்கான அறிவிப்புகள்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை ( செப்டம்பர் 3- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், முதல் -அமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதில்,
மேலும் படிக்க: புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!
இதையும் படியுங்கள்

தீயணைப்பு துறையினருக்கு ரூ. 80 கோடியில் புதிய குடியிருப்புகள்.. படித்தொகை உயர்வு.. அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த முதல்வர் விஜய்!

சட்டமன்றமா? பட்டிமன்றமா? திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசியவர் அமைச்சர் ராஜ்மோகன்… உதயநிதி நேரடி அட்டாக்!

சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை.. சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா.. அவையில் எழுந்த பலத்த கைதட்டல்… பின்னணி என்ன!

தமிழகத்தில் கருத்தரித்தல் மையங்களில் ஐடி ரெய்டு.. என்ன காரணம்.. பெரும் பரபரப்பு!
- ரூ.212 கோடி மதிப்பீட்டில் காவல்துறை நவீன மயமாக்கப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 காவலர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்படும்.
- நிகழாண்டு 5 ஆயிரம் பெண் காவலர்கள் உள்பட 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
- செயற்கை நுண்ணறிவு, நிகழ் நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன டிஜிட்டல் தடயவியல், நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- காவல்துறையில் பணியின் போது துணிச்சலுடன் பணிபுரிந்து உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்கப்படும்.
- வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சி மையத்தில் உள் விளையாட்டு வெளிப்புற அரங்கம் மற்றும் விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் அமைக்கப்படும்.
ரூ. 200 கோடியில் காவல் துறைக்கு புதிய வாகனங்கள்
- பணி காலத்தின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
- சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடைய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வு பிரிவுகள் சுமார் ரூ. 14 கோடி செலவில் நிறுவப்படும்.
- காவல் துறையின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக ரூ. 200 கோடி செலவில் புதிய வாகனங்கள் வாங்கப்பட உள்ளது.
- தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட சட்டம்- ஒழுங்கு காவல் மாவட்டங்கள் மற்றும் சரணங்களை மறுசீரமைப்பு செய்து புதிதாக கிளாம்பாக்கம் உருவாக்கப்படும்.
- கூடுவாஞ்சேரி சரக்கத்தை 2- ஆக பிரித்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் சரகம் உருவாக்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் புதிய காவல் நிலையம்
- ஆவடி காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக பூந்தமல்லி காவல் மாவட்டம் மற்றும் பூந்தமல்லி காவல் சரகம் பிரிக்கப்பட்டு திருமழிசை காவல் சரகம் உருவாக்கப்படும்.
- காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளின் தூய்மை பணிகள் வெளி முகமை ஆண்டுக்கு ரூ. 60 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடம் ரூ.1.95 கோடியில் கட்டப்படும்.
- தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் புதிய ஊரக காவல் நிலைய கட்டடம் ரூ. 2.14 கோடியில் கட்டப்படும்.
- தென்காசி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிர்வாக கட்டிடம், ஆயுத கிடங்கு, காவலர்கள் தங்குமிடம், வாகனங்களுக்கான கொட்டகை, பயிற்சி காவலர் உணவகம் மற்றும் கேண்டின் ரூ. 37.30 கோடியில் புதிதாக கட்டப்படும்.
மேலும் படிக்க: “யாரும் ஓடிப் போகக் கூடாது.. திங்கட்கிழமை பதில் சொல்றேன்!”.. உதயநிதிக்கு சவால் விடுத்த முதல்வர் விஜய்!!
Follow Us