தடியால் அடித்தும் விடாமல் பெண்ணை கடித்த பிட் புல் நாய் – அதிர்ச்சி வீடியோ வைரல்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட 9 மாத வயதுடைய பிட் புல் நாய், பெண்ணை சரமாரியாக கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பாளையம் சாலையில் உள்ள சுப்பிரமணிய நகரில் வசிக்கும் கணேசனின் மனைவி கவிதா, 44, வீட்டில் இருந்தபோது நாய் திடீரென தாக்கியுள்ளது. முகம், தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடிபட்டதில் அவர் படுகாயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட 9 மாத வயதுடைய பிட் புல் நாய், பெண்ணை சரமாரியாக கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பாளையம் சாலையில் உள்ள சுப்பிரமணிய நகரில் வசிக்கும் கணேசனின் மனைவி கவிதா, 44, வீட்டில் இருந்தபோது நாய் திடீரென தாக்கியுள்ளது. முகம், தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடிபட்டதில் அவர் படுகாயமடைந்தார்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், கீழே விழுந்த கவிதாவை நாய் தொடர்ந்து தாக்குவதும், அக்கம் பக்கத்தினர் தடியால் அடித்து விரட்ட முயன்றும் தாக்குதலை நிறுத்தாமல் மீண்டும் கடிப்பதும் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த கவிதா ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
