கோவையில் பழங்கால கேமராக்கள் கண்காட்சி; ஆர்வமுடன் வந்த மாணவர்கள்
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, கோவைப்புதூரில் உள்ள விஎல்பி கல்லூரியில் “லுமினா 2.0” என்ற பெயரில் பழங்கால கேமராக்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், புகைப்படக் கலையின் ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தும் பல்வேறு பழங்கால கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு புகைப்படக் கண்காட்சி, டென்ட்கொட்டா திரை அனுபவம், முப்பரிமாணக் காட்சிகள் உள்ளிட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
Follow Us
