Team India: இது வெறும் சிகிச்சை மையம் மட்டுமல்ல.. CoE குறித்து விவிஎஸ் லக்ஷ்மன் விளக்கம்!
VVS Laxman on Indian Cricketers Recovery: இந்திய அணியில் (Indian Cricket Team) பும்ரா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷன் மற்றும் வருண் சக்கரவர்த்தி உட்பட 13 முதல் 14 இந்திய அணியில் வீரர்கள் அந்த மையத்தில் மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தற்போது CoE-ன் பங்கு, காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்று தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.
பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) கடந்த சில காலமாக அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. பல இந்திய வீரர்கள் காயங்களால் பாதிக்கப்பட்டு, அந்த CoE-ல் மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் குணமடைந்து அங்கிருந்து திரும்பிய பின்னரும், சிறிது காலத்திலேயே மீண்டும் காயமடைந்துள்ளனர். ஹர்ஷித் ராணாவும் அவர்களில் ஒருவர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ராணா 97 கிலோகிராம் எடை இருந்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது. அதேபோல், காயம் காரணமாக பும்ராவும் சுதர்ஷனும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் (Indian Cricket Team) பும்ரா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷன் மற்றும் வருண் சக்கரவர்த்தி உட்பட 13 முதல் 14 இந்திய அணியில் வீரர்கள் அந்த மையத்தில் மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தற்போது CoE-ன் பங்கு, காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்று தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.
ALSO READ: இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம்.. அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளும் பிசிசிஐ செயலாளர்!




ஹர்ஷித் ராணா குறித்து விவிஎஸ் லக்ஷ்மன் விளக்கம்:
Reporter 🗣️: Players are fully fit while playing in the IPL, but when it comes to playing for India, we often see them getting injured. Should the players or the fitness management be blamed for these repeated injuries?
VVS Laxman 🗣️:I don’t think we should use the word ‘blame’… pic.twitter.com/7nN0ztDHu2
— Central Cricket (@arshdeep3444) August 9, 2026
ஹர்ஷித் ராணாவின் உடல் எடை அதிகமாக இருந்தபோதிலும், அவர் ஏன் போட்டிக்குத் தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டார் என்பது குறித்து பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய லக்ஷ்மன், ”நிர்வாகம் தற்போது வீரர்களின் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.தொடரின் நடுவில் யோ-யோ சோதனையை நடத்துவது சாத்தியமற்றது என்பதால், வீரர்களின் உடற்தகுதியைக் கண்காணிக்க பிரான்கோ சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு வீரரின் போட்டித் தயார்நிலையை நிர்வாகம் தீர்மானிக்க உதவுகிறது.”என்றார்.
பும்ரா மற்றும் சுதர்ஷனின் காயங்கள் குறித்து லக்ஷ்மன் என்ன கூறினார்?
விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில், “சாய் சுதர்ஷன் மற்றும் பும்ரா ஆகியோர் உடற்தகுதியின் அடிப்படையில் தனித்தனியாக மதிப்பிடப்பட்டனர். ஒரு அளவுகோலில் இருந்து மற்றொரு அளவுகோலுக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்ட பின்னரே விளையாட அனுமதிக்கப்பட்டனர். மதிப்பீட்டுக் குழுவிற்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு சுமூகமாக உள்ளது. சிறப்பு மையம் என்பது வெறும் சிகிச்சை பெறும் மையம் மட்டுமல்ல. வீரர்கள் சிறந்து விளங்க உதவுவதில் அதற்கு மிக விரிவான பங்கு உள்ளது.
ALSO READ: கேப்டன் கில் முதல் குல்தீப் வரை.. இலங்கை டெஸ்ட் தொடரில் படைக்கப்போகும் சாதனை!
காயங்கள் ஒரு வீரரின் விளையாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அவற்றைக் கண்காணிக்கும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதே முக்கியம். நாங்கள் ஒருவர் மீது ‘குற்றம் சாட்டுதல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அது ஒருவரைப் பலிகடாவாக்க முயற்சிப்பதாக அமைந்துவிடும்,” என்றார்.