AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம்.. அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளும் பிசிசிஐ செயலாளர்!

Indian Players Injury: ஹர்திக் பாண்டியா (தொடை தசைப்பிடிப்பு), வருண் சக்கரவர்த்தி (பின்தசை தசைப்பிடிப்பு), மற்றும் பிரின்ஸ் யாதவ் (பின்தசை தசைப்பிடிப்பு) ஆகியோரும் சிஓஏ-வில் (COA) உள்ளனர். இதனால், விளையாட்டு அறிவியல் குழு குறிப்பிடத்தக்க அழுத்தத்தில் உள்ளது. இதனால், இந்திய அணி பிரச்சனையை எதிர்கொள்கிறது.

Team India: இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம்.. அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளும் பிசிசிஐ செயலாளர்!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Aug 2026 08:00 AM IST

இந்திய கிரிக்கெட் அணியில் (Indian Cricket Team) உள்ள பல வீரர்கள் தற்போது காயமடைந்துள்ளனர். இந்தத் தொடர் காயங்கள் குறித்து பிசிசிஐ பெரும் குழப்பத்தில் உள்ளது. கேப்டன் சுப்மன் கில்லும் இதுபற்றிக் கேள்விகளை எழுப்பியுள்ளார். தற்போது, ​​இந்தப் பிரச்சினை தீவிரமடைவதைக் கண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நடவடிக்கை எடுத்துள்ளது. வீரர்களின் மறுவாழ்வு மற்றும் குணமடைதல் செயல்முறையை ஆய்வு செய்வதற்காக, பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா, 2026 ஆகஸ்ட் 8ம் தேதியான இன்று சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் (CoE) கிரிக்கெட் தலைவர் விவிஎஸ் லட்சுமணனைச் சந்திப்பார்.

ALSO READ: காயத்தால் சிகிச்சையில் 13 இந்திய வீரர்கள்.. குழப்பத்தில் திணறும் கில் – காம்பீர்!

ஜஸ்பிரித் பும்ரா (முழங்கால் வீக்கம்), சாய் சுதர்சன் (இடது கால்விரல் காயம்), ஹர்ஷித் ராணா (தொடைத்தசைப் பிடிப்பு), நிதிஷ் குமார் ரெட்டி (தொடைத்தசைப் பிடிப்பு) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (தொடைத் தசைப்பிடிப்பு) ஆகியோர் பல்வேறு காயங்கள் காரணமாக இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வில்லை. பெங்கால் ரஞ்சி கோப்பை அரையிறுதித் தோல்விக்குப் பிறகு, ஆகாஷ் தீப் (அழுத்த முறிவு) நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து வருகிறார்.

பிசிசிஐ செயலாளர் ஆய்வு:

மேலும், ஹர்திக் பாண்டியா (தொடை தசைப்பிடிப்பு), வருண் சக்கரவர்த்தி (பின்தசை தசைப்பிடிப்பு), மற்றும் பிரின்ஸ் யாதவ் (பின்தசை தசைப்பிடிப்பு) ஆகியோரும் சிஓஏ-வில் (COA) உள்ளனர். இதனால், விளையாட்டு அறிவியல் குழு குறிப்பிடத்தக்க அழுத்தத்தில் உள்ளது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிதின் படேல் ராஜினாமா செய்ததிலிருந்து இந்தத் துறைக்குத் தலைவர் இல்லை. இந்த வீரர்கள் அனைவரையும் முழு உடற்தகுதியுடன் கூடிய விரைவில் மீண்டும் களத்திற்குத் திரும்பச் செய்வதே தற்போதைய மிகப்பெரிய சவாலாகும்.

இதையடுத்து, பிசிசிஐ செயலாளர் சாய்கியா, விவிஎஸ் லட்சுமணனுடன் இணைந்து நிலைமையை ஆய்வு செய்ய பெங்களூருவில் இருப்பார். இருவருக்கும் இடையே ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் அல்லது தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இந்த சந்திப்பில் ஆன்லைனில் கலந்துகொள்வார்களா என்பது இன்னும் தெரியவில்லை.

ALSO READ: விளையாட சூழலற்ற நிலையில் சுதர்சன்.. இந்த 3 வீரர்களில் யாருக்கு வாய்ப்பு?

இங்கிலாந்துக்கு வந்தபோது ஹர்ஷித் ராணா அதிக உடல் எடையுடன் காணப்பட்டதாகக் கூறப்பட்டதை தேர்வுக் குழு ஏற்கவில்லை. அதேபோல், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது பும்ராவும் சுதர்ஷனும் பங்கேற்பார்கள் என்று தேர்வுக் குழுவிடம் முதலில் கூறப்பட்டது. இருப்பினும், விளக்கம் அளித்த பிறகு, காயத்தைத் தொடர்ந்து பும்ராவின் முழங்காலில் நீர் தேக்கம் ஏற்பட்டிருந்ததும், அதிலிருந்து மீள அதிக காலம் தேவைப்படும் என்பதும் தெரியவந்தது.

Follow Us