Vaibhav Suryavanshi: பாட்னாவில் பிரதமர் மோடியை சந்தித்த சூர்யவன்ஷி.. காலில் விழுந்து ஆசிர்வாதம் வணங்கிய அழகிய தருணம்!
Vaibhav Suryavanshi met PM Modi: பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பிரதமர் மோடி சந்தித்தார். தொடர்ந்து, வைபவ் சூர்யவன்ஷி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது அவரது கால்களைத் தொட்டு வணங்கினார். இந்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை (Prime Minister Narendra Modi) இன்று அதாவது 2025 மே 30ம் தேதி ஐபிஎல் 2025ல் (IPL 2025) ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இளம் வயதில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) தனது குடும்பத்துடன் சந்தித்தார். இந்த சந்திப்பானது தற்போது சமூக ஊடகங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது. மோடி மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் சந்திப்பு பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் நடந்தது. இந்த சந்திப்பின் படங்களை பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
காலில் விழுந்த ஆசிர்வாதம் வாங்கிய சூர்யவன்ஷி:
Full video, Rajasthan blood🔥 pic.twitter.com/s65GGgenb2
— Lala (@Lala_The_Don) May 30, 2025




At Patna airport, met the young cricketing sensation Vaibhav Suryavanshi and his family. His cricketing skills are being admired all over the nation! My best wishes to him for his future endeavours. pic.twitter.com/pvUrbzdyU6
— Narendra Modi (@narendramodi) May 30, 2025
ஐபிஎல் போட்டியின்போது எம்.எஸ்.தோனியின் கால்களை தொட்டு வணங்கி வைரலான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது அவரது கால்களை தொட்டு வணங்கினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது பீகார் மாநிலத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று அதாவது 2025 மே 30ம் தேதி பாட்னா விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போதுதான், 14 வயதான இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்தினார்.
பிரதமர் மோடியை சந்தித்ததும் வைபவ் சூர்யவன்ஷி கால்களை கொண்டு வணங்கினார். அப்போது, அவரது பெற்றோர்கள் பிரதமரை கூப்பிய கைகளுடன் வரவேற்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை பாட்னா விமான நிலையத்தில் சந்தித்தேன்.’ அவரது கிரிக்கெட் திறமை நாடு முழுவதும் பாராட்டப்படுகிறது! அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.” என புகைப்படங்கள் குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல் 2025 சீசனில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி:
Vaibhav’s fearless approach, bat speed, picking the length early, and transferring the energy behind the ball was the recipe behind a fabulous innings.
End result: 101 runs off 38 balls.
Well played!!pic.twitter.com/MvJLUfpHmn
— Sachin Tendulkar (@sachin_rt) April 28, 2025
நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 18 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்களுடன் மொத்தம் 252 ரன்கள் எடுத்திருந்தார். ஏப்ரல் 28, 2025 அன்று, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில், அவர் 35 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வேகமான சதமாகும். ஐபிஎல்லில் சதம் அடித்த இளைய வீரர் (14 வயது 32 நாட்கள்) என்ற பெருமையையும் வைபவ் பெற்றார்.