AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2026: மாறிய நிர்வாகம்..! ஆர்சிபி அணியின் பெயர் மாற்றமா? புது ஓனர் விளக்கம்!

RCB Change Name: ஐபிஎல் 2026-க்கு முன்னதாக, ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், பிளாக்ஸ்டோன் மற்றும் போல்ட் வென்ச்சர்ஸ் ஆகியவற்றின் கூட்டமைப்பு ஆர்சிபியின் 100% பங்குகளைக் கையகப்படுத்தியது. இந்த மாபெரும் பெருநிறுவனக் கையகப்படுத்தலுக்குப் பிறகு, புதிய உரிமையாளர்கள் தங்கள் பிராண்டிங்கிற்கு ஏற்றவாறு பெயரை மாற்றக்கூடும் என்று யூகங்கள் எழுந்தன.

IPL 2026: மாறிய நிர்வாகம்..! ஆர்சிபி அணியின் பெயர் மாற்றமா? புது ஓனர் விளக்கம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெயர் மாற்றம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Sep 2026 19:27 PM IST

ஐபிஎல் 2027 சீசன் (IPL 2027) தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஐபிஎல் 2025 மற்றும் ஐபிஎல் 2026 என தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்று வரலாறு படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணியின் உரிமையாளர் மாறிய பிறகு, ஆர்சிபி அணியின் பெயர் மாற்றப்படலாம் என்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, ​​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய தலைவர் ஆர்யமான் பிர்லா, இந்த விவாதங்கள் குறித்த தனது முடிவை அறிவித்துள்ளார்.

ALSO READ: சாம்பியன் வென்ற அணிக்கு ஆர்சிபிக்கு ஷாக்.. நட்சத்திர வீரர் விளையாட தடை விதிப்பு!

ஆர்சிபியின் பெயர் மாற்றப்படுமா?

ஐபிஎல் 2026-க்கு முன்னதாக, ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், பிளாக்ஸ்டோன் மற்றும் போல்ட் வென்ச்சர்ஸ் ஆகியவற்றின் கூட்டமைப்பு ஆர்சிபியின் 100% பங்குகளைக் கையகப்படுத்தியது. இந்த மாபெரும் பெருநிறுவனக் கையகப்படுத்தலுக்குப் பிறகு, புதிய உரிமையாளர்கள் தங்கள் பிராண்டிங்கிற்கு ஏற்றவாறு பெயரை மாற்றக்கூடும் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால், புதிய நிர்வாகம் ரசிகர்களின் உணர்வுகளுக்கும் ஆர்சிபியின் பிராண்ட் மதிப்புக்கும் முன்னுரிமை அளித்து, பெயரை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தது.

முக்கிய தகவலை வெளியிட்ட ஆர்யமான் பிர்லா:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளர் மாற்றம் ஏற்பட்டாலும் அணியின் பெயர் மாறாது என்று ஆர்யமான் பிர்லா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது,” ஆர்சிபி ஒரு உலகளாவிய மற்றும் பெரிய பிராண்ட். நிர்வாகத்திற்கு இந்தப் பெயர் மிகவும் பிடிக்கும் என்று கூறினார். முன்னதாக, அவரது சகோதரி அனன்யா பிர்லா, அந்த அணியின் வரலாற்று அடையாளம் மாறாது என்று சமூக ஊடகங்களில் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

ALSO READ: அதில் தோனிக்கு விருப்பமில்லை…. பத்ரிநாத் பரபரப்பு தகவல்

18 வருட வறட்சிக்குப் பிறகு 2 சாம்பியன் பட்டங்கள்

2008-ல் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து 2024 வரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு சாம்பியன் பட்டத்தை கூட வென்றதில்லை. இருப்பினும், ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பிற அனுபவ கிரிக்கெட் வீரர்கள் இருந்ததால் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர், 2025-ல், இந்திய பேட்ஸ்மேன் ரஜத் படிதாரிடம் அணியின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ரஜத் படிதார் கேப்டன் ஆன முதல் ஆண்டிலேயே, 18 ஆண்டுகால கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆர்சிபி-க்கு அதன் முதல் ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தந்தார். படிதாரின் கேப்டன்சியின் கீழ், அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்ததுடன், ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. இப்போது 2027-ல், தொடர்ச்சியாக 3 கோப்பைகளை வெல்லும் நோக்கத்துடன் ஆர்சிபி களமிறங்குகிறது.

Follow Us