காரமடை அருகே குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள் – வைரல் வீடியோ!
காரமடை அருகே வெள்ளியங்காடு பகுதியில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க இரண்டு காட்டு யானைகள் குட்டையில் நீண்ட நேரம் குளித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், காரமடை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டையில் நீண்ட நேரம் குளித்தன.
காரமடை அருகே வெள்ளியங்காடு பகுதியில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க இரண்டு காட்டு யானைகள் குட்டையில் நீண்ட நேரம் குளித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், காரமடை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டையில் நீண்ட நேரம் குளித்தன.
பின்னர் அங்கிருந்து நகர்ந்த யானைகள் அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் குட்டையில் குளித்ததை விவசாயி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
