AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழப்பு!

கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழப்பு!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Sep 2026 08:11 AM IST

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனம்பிக்கும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரி மீது மோதியது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனம்பிக்கும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரி மீது மோதியது. கார் முழுவதும் நொறுங்கியதால், தீயணைப்புத் துறையினர் வாகனத்தை வெட்டி உடல்களை மீட்டனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் சுமார் 20 வயதுடையவர்கள் என்றும், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. விஷ்வா, சூர்யா, யுவ சஞ்சித், சந்தோஷ், பிரசன்னா உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Follow Us