IPL 2026: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்.. சாலைகளில் அத்துமீறிய ரசிகர்கள்.. போலீஸ் தடியடி..!
RCB IPL 2026: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 2025ம் ஆண்டு சீசனில் 18 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு தனது முதல் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, இவ்முறை பாதுகாப்பு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 31ம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி 2வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட பல நகரங்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை மிஞ்சிய கலவரத்தில் ஈடுபடும் வீடியோக்கள் வெளியாகின. வைரலான இந்தக் காணொளியில், தெருக்களில் கொண்டாடும் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்துவது தெரிந்தது. இத்தகைய கொண்டாட்டம் பொதுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
ALSO READ: 2008 முதல் 2026 வரை.. ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் விவரம்!




ஊடக அறிக்கைகளின்படி, ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பெங்களூருவின் சில பகுதிகளில் இருந்து வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில, ரசிகர்கள் சாலையின் நடுவில் பட்டாசுகளை வெடித்தும், மக்கள் தடுப்புகளைச் சேதப்படுத்துவதும் பதிவாகியிருந்தது. சிலர் கொண்டாட்டங்களில் மிகவும் மூழ்கிப்போய், வாகனங்கள் மீது ஏறினர். இந்தச் செயல்களைக் கண்ட காவல்துறையினர், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் தலையிட்டு தடியடி நடத்த வேண்டியிருந்தது.
கடந்த 2025ம் ஆண்டு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு:
Hyderabad Police won the toss and elected to bat first 😭 pic.twitter.com/jK75VZh0DB
— Out Of Context Cricket (@GemsOfCricket) June 1, 2026
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 2025ம் ஆண்டு சீசனில் 18 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு தனது முதல் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, இவ்முறை பாதுகாப்பு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இந்த முறை ஆர்சிபியின் வெற்றியைக் கொண்டாட வெற்றி அணிவகுப்பு நடைபெறாது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. ரசிகர்கள் வெற்றியை வீடுகளிலேயே கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ALSO READ: சாம்பியனான ஆர்சிபி.. அனுஷ்கா சர்மாவுடன் க்யூட் டான்ஸ் ஆடிய கோலி.. வைரலாகும் வீடியோ!
ஆர்சிபியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலி:
குஜராத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலி ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட குஜராத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இந்த இறுதிப் போட்டி ஒருதலைப்பட்சமாக அமைந்தது.