IPL 2026 Champions: விராட் கோலியின் அதிரடி அரைசதம்.. 2வது முறையாக கோப்பையை தூக்கிய ஆர்சிபி!
RCB vs GT Final:ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 மே 31ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியின் அரைசதத்தின் உதவியுடன் 18 ஓவர்களில் இலக்கை விரட்டி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 மே 31ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியின் அரைசதத்தின் உதவியுடன் 18 ஓவர்களில் இலக்கை விரட்டி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு சீசன்களுக்கு ஐபிஎல் கோப்பையை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது. 2010-2011ல் சென்னை சூப்பர் கிங்ஸும், அதைத் தொடர்ந்து 2019-2020ல் மும்பை இந்தியன்ஸும் இந்தச் சாதனையை நிகழ்த்தின. தற்போது, 2025ஆம் ஆண்டு பட்டத்தை வென்ற பெங்களூரு அணி, 2026ஆம் ஆண்டு பட்டத்தையும் வென்று இந்தச் சிறப்புப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ALSO READ: ஒற்றை ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர்.. கோப்பையை வெல்ல பெங்களூருவுக்கு 156 ரன்கள் இலக்கு!




ஆர்சிபி வரலாறு படைத்தது
ரஜத் படிதாரின் தலைமையில், ஆர்சிபி அணி சரித்திரம் படைத்துள்ளது. எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு, தொடர்ச்சியாக 2 சாம்பியன் பட்டங்களை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை படிதார் பெற்றுள்ளார். இந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்று வர்ணனையாளர்களும் நிபுணர்களும் கூறி வந்தனர். இருப்பினும், கேப்டன் படிதார் மற்றும் ஆர்சிபி நிர்வாகத்திற்கு வேறு திட்டங்கள் இருந்தன. பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
ரன் அடித்த திணறிய குஜராத்:
ஐபிஎல் 2026-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், சுப்மன் கில், சாய் சுதர்ஷன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் தொடக்க ஆட்டமிழப்புகள் ஒட்டுமொத்த அணியையும் சரிவடையச் செய்ததுதான். இறுதிப் போட்டியிலும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. சுப்மன் கில் (10), சாய் சுதர்ஷன் (12) மற்றும் ஜோஸ் பட்லர் (19) ஆகியோர் தொடக்கத்திலேயே வெளியேறினர். வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்து, குஜராத் அணி 155 ரன்களை எட்ட உதவினார். பெங்களூரு அணிக்காக, ரசிக் தார் சலாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்.
ALSO READ: 2008 முதல் 2026 வரை.. ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் விவரம்!
ஆர்சிபியின் ‘விராட்’ வெற்றி
156 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலியின் பங்களிப்பால் ஒரு சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது . பெங்களூரு அணி பவர்பிளேயில் ஏற்கெனவே 70 ரன்கள் எடுத்திருந்தது. ஐயர் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 24 ரன்களும், ரஜத் பதிதார் 15 ரன்களும் பங்களித்தனர். இருப்பினும், பெங்களூருவின் வெற்றிக்கு நாயகனாகத் திகழ்ந்தவர் விராட் கோலி. அவர் 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணிக்கான வெற்றி ஷாட்டையும் விராட் அடித்தார். அர்ஷத் கானின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து ஆர்சிபியின் வெற்றியை அவர் உறுதி செய்தார்.