IPL 2027: டெல்லியே போதும்.. பழைய அணிக்கு செல்லும் ரிஷப் பண்ட்.. குறையும் சம்பளம்!
Delhi Capitals: ரிஷப் பண்ட் கடந்த 2016ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார். டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் இதுவரை ஆடிய 9 சீசன்களில் 111 போட்டிகளில் 3284 ரன்கள் எடுத்தார். இருப்பினும், கடந்த இரண்டு சீசன்களில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக, பண்ட் 28 போட்டிகளில் வெறும் 581 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஒரு காலத்தில் ஐபிஎல் வரலாற்றில் (IPL) ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்டார். அப்போது, அது ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய பரிமாற்றமாக பார்க்கப்பட்டது. தற்போது, ரிஷப் பண்ட் தொடர்பான ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ரிஷப் பண்ட் தனது 27 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Gaints) அணிவுடனான உறவை முறித்துக்கொண்டு அடுத்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சேரக்கூடும். ஊடக அறிக்கைகளின்படி, லக்னோ மற்றும் டெல்லி அணிகள் ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பரிமாற்றம் செய்யக்கூடும். அடுத்த சீசனிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் மாறவிருக்கும் வேளையில் இந்த வர்த்தக ஒப்பந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பார்த்த் ஜிண்டாலின் ஜே.எஸ்.டபிள்யூ குழுமம், 2027 மற்றும் 2028 சீசன்களுக்கு இடையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளராக உருவெடுக்கிறது.
ALSO READ: CSKக்கு மாறும் ஹர்திக்.. KKRக்கு செல்லும் சூர்யகுமார்.. விரைவில் நடக்கப்போகும் வர்த்தகம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர்கள் மாற்றம்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஜிஎம்ஆர் குழுமம் (கிரண் குமார் காந்தி) மற்றும் ஜேஎஸ் டபிள்யூ குழுமம் (பார்த்த் ஜிண்டால்) ஆகியவற்றுக்குச் சொந்தமானது. இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு குழுமமும் இரண்டு ஆண்டுகளுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும். 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் ஜிஎம்ஆர் குழுமம் கட்டுப்பாட்டில் இருந்ததால், 2027ம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் மாறுவார். மேலும் பார்த்த் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ் டபிள்யூ குழுமம் 2028-ஆம் ஆண்டில் கட்டுப்பாட்டை ஏற்கும்.




ரிஷப் பண்ட் மீது பெரிய ஏலம்:
கடந்த ஐபிஎல் 2026 சீசனில் ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது. தற்போது, இவ்வளவு பெரிய தொகைக்கு பதிலாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ரிஷப் பண்டை ரூ. 15 கோடிக்கு வாங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் நடைமுறைகளை இறுதி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது முடிந்தவுடன், இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒப்புதலுக்காக பிசிசிஐ-க்கு அனுப்பப்படும்.
ALSO READ: முன் கூட்டியே தொடங்கும் ஐபிஎல் 2027 – போட்டிகள் அதிகரிக்கப்படுமா? பிசிசிஐ விளக்கம்
ரிஷப் பண்ட் கடந்த 2016ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார். டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் இதுவரை ஆடிய 9 சீசன்களில் 111 போட்டிகளில் 3284 ரன்கள் எடுத்தார். இருப்பினும், கடந்த இரண்டு சீசன்களில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக, பண்ட் 28 போட்டிகளில் வெறும் 581 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.