Football: ரொனால்டோ, மெஸ்ஸிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெளியான பகீர் தகவல்..!
Lionel Messi Bomb Threat: அர்ஜென்டினா மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக, அட்லாண்டாவில் மெஸ்ஸி தொடர்பான மற்றொரு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நபர் ஒருவர், மைதானத்திற்குள் நுழைந்து வெடிபொருட்களைக் கொண்டு மெஸ்ஸியைத் தாக்குவதாகக் கூறி மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை (2026 FIFA World Cup) தொடரானது பல விறுவிறுப்பான போட்டிகளுடன், பல மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்தது. இந்த உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியான அர்ஜெண்டினாவை வீழ்த்தி, ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது. அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் (Ronaldo) இத்தொடரின் முக்கிய ஈர்ப்புகளாக இருந்தனர். இருப்பினும், தற்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வீரர்களுக்கு உலகக் கோப்பையின்போது தனிநபர் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ ஒரு காவல்துறை அறிக்கையும் வெளியாகியுள்ளது.
ALSO READ: 112 ஆண்டுகள் காத்திருப்பு! இந்திய மண்ணில் களமிறங்கும் பிரேசில் கால்பந்து அணி.. கொண்டாடும் ரசிகர்கள்!
மெஸ்ஸி மீது தாக்குதல் நடத்த திட்டம்:
மெஸ்ஸி மீதான சில அச்சுறுத்தல்கள் காரணமாக, பாதுகாப்பு அமைப்புகள் மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனைகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டல்லாஸின் ஜோர்டான் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா அணி விளையாட இருந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக விமான நிலையத்தை தொடர்பு கொண்ட ஒருவர், மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டு தன்னுடன் மேலும் இரண்டு பேருடன் மைதானத்திற்குச் செல்வதாகவும், தன்னிடம் கையால் செய்யப்பட்ட வெடிகுண்டு மற்றும் ஒரு AR-15 ரக துப்பாக்கி இருப்பதாகவும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக உஷார் நிலைக்குச் சென்றன.




மேலும் ஒரு எச்சரிக்கை:
அர்ஜென்டினா மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக, அட்லாண்டாவில் மெஸ்ஸி தொடர்பான மற்றொரு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நபர் ஒருவர், மைதானத்திற்குள் நுழைந்து வெடிபொருட்களைக் கொண்டு மெஸ்ஸியைத் தாக்குவதாகக் கூறி மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. போட்டியின் போது, மைதானத்திற்குள் 3 குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இருப்பினும், அத்தகைய தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதும் சோதனையிட்டு, ஏற்படக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுப்பதற்காக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியை நாடினர்.
ரொனால்டோ பெயரை சொல்லியும் மிரட்டல்:
போர்ச்சுகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சம்பந்தப்பட்ட ஒரு மிரட்டல் செய்தியும் தற்போது வைரலாகி வருகிறது. கிடைத்த தகவலின்படி, கடந்த 2026 ஜூன் 14ம் தேதி ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் ரொனால்டோ தங்கியிருந்த இடம் குறித்த தகவல்களைச் சேகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், 2026 ஜூன் 16ம் தேதி, ஹூஸ்டன் காவல்துறை அந்த நபரை அடையாளம் கண்டு, போர்ச்சுகல் அணி தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து அவரைக் கைது செய்தது.
ALSO READ: வெற்றி களிப்பில் துள்ளிய ஸ்பெயின்.. கோபத்தில் அர்ஜென்டினா வீரர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
நடுவருக்கும் வந்த மிரட்டல்:
2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் வீரர்களுக்கு மட்டுமல்லாது, பிரெஞ்சு நடுவர் ஃபிரான்சுவா லெடெக்சியருக்கும் சமூக வலைதளங்களில் மிரட்டல்கள் வந்தன. அவருக்கு வாட்ஸ்அப்பில் 6,000-க்கும் மேற்பட்ட மிரட்டல் செய்திகள் வந்ததாகவும், பாதுகாப்பு அமைப்புகள் எந்தவொரு மிரட்டலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.