AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Rishabh Pant

Rishabh Pant

இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் ரிஷப் பண்ட். இவர் 04 அக்டோபர் 1997ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருகாடியில் பிறந்தார். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ரிஷப் பண்ட், அதன்பிறகு அம்மாவுடன் உத்தரகண்டில் இருந்து டெல்லிக்காக பயிற்சிக்கு வந்தார். டெல்லி வந்த ரிஷப் பண்ட் சோனெட் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். முதன்முறையாக டெல்லி வந்தபோது, ரிஷப் பண்ட் தனது தாயுடன் தங்க இடம் இல்லாமல் குருத்வாராவில் உள்ள் சாலையில் இரவை கழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது ஆரம்ப கல்வி மற்றும் கிரிக்கெட்டை டெல்லியிலேயே கற்று, விரைவில் அண்டர் – 19 இந்திய அணியில் இடம் பிடித்தார். 2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், அந்த போட்டியில் 3 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் அவுட்டானார். அதற்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பண்ட் தொடர்ந்து நல்ல இன்னிங்ஸை விளையாடி, இன்று பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்

Read More

IND vs SL: மானவின் மாயாஜால சுழல்.. ரிஷப் பண்ட் ‘ராக்கெட்’ ஸ்டம்பிங்.. வைரலாகும் வீடியோ!

Rishabh Pant Stumping Video: கொழும்பில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கள விளையாட்டுக் கழக (SSC) மைதானத்தில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ICC Ranking: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை.. டாப் 10க்குள் முன்னேறிய ரிஷப் பண்ட்!

Rishabh Pant ICC Ranking: ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இலங்கை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் முறையே 39 மற்றும் 66 ரன்கள் எடுத்தார். இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி, 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களின் உதவியுடன் 63 ரன்கள் எடுத்தார்.

IND vs SL: தோள்பட்டையில் பெரிய கட்டுடன் ரிஷப் பண்ட்.. வெளியான புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Rishabh Pant Injury: பேட்டிங் செய்த பிறகு, ரிஷப் பண்ட்டின் தோள்பட்டைப் பிரச்சனை மோசமடைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய அணி நிர்வாகம் அவரைக் களமிறக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார். அவரது காயம் குறித்து, இந்திய பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், மருத்துவக் குழு பண்ட்டின் காயத்தைக் கண்காணித்து வருவதாகத் தெளிவுபடுத்தினார்.

IND vs SL: முன்னாள் கேப்டன் தோனியின் அதிக ரன்கள்.. குறைந்த போட்டியில் துரத்தி பிடித்த ரிஷப் பண்ட்!

Rishabh Pant Breaks MS Dhoni Record: வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,500 ரன்களை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். கொழும்பில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இந்த மைல்கல்லை எட்டினார்.

IND vs SL: டெஸ்ட் போட்டியில் 100 சிக்ஸர்கள்.. முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!

Rishabh Pant 100 Sixes in Test: ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய அதிவேக பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார். பண்ட் இந்தச் சாதனையை 4,918 பந்துகளில் நிகழ்த்தினார்.

IND vs SL: இலங்கை மண்ணில் அனுபவமில்லாத இந்திய அணியா? 3 வீரர்களே மட்டுமே இதுவரை களம்!

India vs Srilanka Test Series: இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் உள்ள 15 வீரர்களில் 12 பேர் இதற்கு முன்பு இலங்கை மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை. ஒரு சில வீரர்கள் இலங்கையில் முதல் தர கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. அதில், கேப்டன் சுப்மன் கில் அவர்களில் ஒருவர்.

IND vs SL: மானவ், ரிஷப் பண்ட் செய்த தவறால் விக்கெட் மிஸ்.. சட்டென கே.எல்.ராகுல் செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ!

India vs Sri Lanka Cricket XI Warm Up Match: கேப்டன் கே.எல். ராகுல் அணியின் 21வது ஓவரை மானவ் சுதாரிடம் கொடுத்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில், பேட்டிங் செய்துகொண்டிருந்த நிஷான் மதுஷ்கா 66 ரன்களில் இருந்தார். மதுஷ்கா அந்தப் பந்தை யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நோக்கி அடித்துவிட்டு ஓடினார். ஆனால், பேட்டிங் செய்யாத ரவிந்து ரசந்தா பந்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் அவர் ஓடவில்லை.

IPL 2027: டெல்லி அணியில் ரிஷப் பண்ட்.. லக்னோ அணியில் குல்தீப்.. வெற்றிகரமாக நடந்து முடிந்த பரிமாற்றம்!

IPL 2027 Trade: ஐபிஎல் 2025 ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச ஏலத்தொகையான ரூ. 27 கோடிக்கு (சுமார் $2.7 பில்லியன்) லக்னோ அணி ரிஷப் பண்டை வாங்கியது. இந்த பரிமாற்றத்தைத் தொடர்ந்து, பண்ட் தற்போது ரூ. 15 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

Rishabh Pant: கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டாரா பண்ட்..? வெளியான பகீர் தகவல்!

Rishabh Pant LSG Captaincy: கேப்டன் பதவியில் இருந்து விலகிய சில நாட்களிலேயே, ரிஷப் பண்ட் தனது முன்னாள் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸுக்குத் திரும்பக்கூடும் என்ற யூகங்கள் பரவத் தொடங்கின. ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக குல்தீப் யாதவை வர்த்தக ஒப்பந்தத்தில் தங்கள் கூட்டாளியாக லக்னோ கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது.

IPL 2027: டெல்லியே போதும்.. பழைய அணிக்கு செல்லும் ரிஷப் பண்ட்.. குறையும் சம்பளம்!

Delhi Capitals: ரிஷப் பண்ட் கடந்த 2016ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார். டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் இதுவரை ஆடிய 9 சீசன்களில் 111 போட்டிகளில் 3284 ரன்கள் எடுத்தார். இருப்பினும், கடந்த இரண்டு சீசன்களில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக, பண்ட் 28 போட்டிகளில் வெறும் 581 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் சொதப்பல்.. அடுத்த சீசனில் இந்த 4 அணிகளின் கேப்டன்கள் வெளியேற்றமா?

IPL 2027 Captains Change: ரிஷப் பண்டை தொடர்ந்து , ஹர்திக் பாண்ட்யாவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அணியின் ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, இத்தகைய முடிவு எடுக்கப்படலாம். ஹர்திக் பாண்ட்யா ஏற்கனவே இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2026: கேப்டனாக மோசமான செயல்பாடு.. லக்னோ கேப்டன் பதவியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட்!

Rishabh Pant: ஐபிஎல் 2026 சீசனில் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டதைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்தத் தகவலை லக்னோ அணி நிர்வாகம் இன்று அதாவது 2026 மே 29ம் தேதி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது.

Team India: கில் தலையீடு! பண்ட் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? வைரலாகும் போட்டோ!

Rishabh Pant Removed Vice Captaincy: ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பண்ட் (Rishabh Pant) நீக்கப்பட்டதோடு, டெஸ்ட் தொடரில் அவரது துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சுப்மன் கில்லின் தூண்டுதலின் பேரிலேயே பண்ட் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Team India: டெஸ்டில் பறிபோன துணை கேப்டன் பதவி.. சோகத்தில் ரிஷப் பண்ட்? காரணம் என்ன?

Rishabh Pant Test Vice Captaincy: சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாகத் தொடரும் நிலையில், ரிஷப் பண்டை துணை கேப்டன் பதவியிலிருந்து திடீரென நீக்கியது குறித்து தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அகர்கரின் கூற்றுப்படி, ரிஷப் பண்ட் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்புகிறது.

IPL 2026: ரிஷப் பண்ட் நிதான அரைசதம்.. லக்னோவின் வெற்றிக்காக நடராஜன் ஷாட்!

SRH vs LSG: ஐபிஎல் 2026 சீசனின் 10வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் வெற்றி பெற்றது.