Rishabh Pant
இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் ரிஷப் பண்ட். இவர் 04 அக்டோபர் 1997ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருகாடியில் பிறந்தார். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ரிஷப் பண்ட், அதன்பிறகு அம்மாவுடன் உத்தரகண்டில் இருந்து டெல்லிக்காக பயிற்சிக்கு வந்தார். டெல்லி வந்த ரிஷப் பண்ட் சோனெட் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். முதன்முறையாக டெல்லி வந்தபோது, ரிஷப் பண்ட் தனது தாயுடன் தங்க இடம் இல்லாமல் குருத்வாராவில் உள்ள் சாலையில் இரவை கழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது ஆரம்ப கல்வி மற்றும் கிரிக்கெட்டை டெல்லியிலேயே கற்று, விரைவில் அண்டர் – 19 இந்திய அணியில் இடம் பிடித்தார். 2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், அந்த போட்டியில் 3 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் அவுட்டானார். அதற்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பண்ட் தொடர்ந்து நல்ல இன்னிங்ஸை விளையாடி, இன்று பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்
IND vs NZ ODI: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி.. 3 முக்கிய வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு.. பிசிசிஐ பிளான் என்ன?
New Zealand ODI Series : 2026, ஜனவரி 11 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் தொடங்கும், இதற்காக இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. புத்தாண்டின் முதல் வாரத்தில் இந்திய அணியின் ஒருநாள் அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- C Murugadoss
- Updated on: Dec 29, 2025
- 07:36 am IST
IND vs NZ: ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கம்மிதான்.. உள்ளே வரும் இஷான் கிஷன்.. நடக்கப்போகும் மாற்றம் என்ன?
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியை ஜனவரி 3 ஆம் தேதி அல்லது ஜனவரி 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிசிசிஐயின் மூத்த தேர்வுக் குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- C Murugadoss
- Updated on: Dec 28, 2025
- 12:05 pm IST
Vijay Hazare Trophy: விஜய் ஹசாரா டிராபியில் களமிறங்கும் கிங்.. டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலி!
Virat Kohli play in Vijay Hazare Trophy: விராட் கோலி இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால், கோலி விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரை இந்திய ஒருநாள் அணியில் தேர்ந்தெடுக்க தேர்வுக் குழுவில் அழுத்தம் உள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 18:53 pm IST
IND vs SA: டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்!
Rishabh Pant Instagram Post: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் செயல்திறன் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. ரிஷப் பண்ட் 2 டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து 49 ரன்கள் மட்டுமே எடுத்தார். குவஹாத்தி டெஸ்டில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பரவலாக விமர்சிக்கப்பட்டது.
- Mukesh Kannan
- Updated on: Nov 28, 2025
- 08:20 am IST
IND vs SA: 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா.. குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அபாரம்.. யார் ஆதிக்கம்?
India vs South Africa 2nd Test Day 1: தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஐடன் மார்க்கரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் அரைசத பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஐடன் மார்க்கரம் 38 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழக்க செய்தார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 22, 2025
- 16:57 pm IST
IND vs SA ODI Series: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!
Rishabh Pant: சுப்மன் கில் காயம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராக இருக்குமாறு ரிஷப் பண்ட்டிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சுப்மன் கில் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே, ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது.
- Mukesh Kannan
- Updated on: Nov 20, 2025
- 17:45 pm IST
IND A vs SA A: மாயமான காயம்! இந்திய அணிக்கு கேப்டனாக திரும்பும் ரிஷப் பண்ட்..! எப்போது தெரியுமா?
India A vs South Africa A: இந்தியா ஏ vs தென்னாப்பிரிக்கா ஏ தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் உலகில் களமிறங்க ரிஷப் பண்ட் தயாராக உள்ளார் . இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் பண்ட்க்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் பண்ட் கிட்டத்தட்ட 2 மாதங்கள் அணியில் இருந்து விலக வேண்டியிருந்தது.
- Mukesh Kannan
- Updated on: Oct 21, 2025
- 16:42 pm IST
Asia Cup 2025: ஆசிய கோப்பை இந்திய அணி.. ரிஷப் பண்ட் இடம் பெறமாட்டாரா?
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெறாமல் போகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Aug 12, 2025
- 17:42 pm IST
Rishabh Pant: கர்நாடக சேர்ந்த கல்லூரி பெண்ணுக்கு கல்வி உதவி.. இடது கைக்கு தெரியாமல் கொடுத்த ரிஷப் பண்ட்!
Rishabh Pant Sponsors Poor Student: ரிஷப் பண்ட், கர்நாடக மாநிலம் பாகல்கோட்டைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி கான்பூர் மடம் என்ற மாணவியின் கல்லூரிப் படிப்பிற்கு ரூ.40,000 நிதி உதவி செய்துள்ளார். பி.சி.ஏ படிக்க விரும்பிய ஜோதிக்கு நிதி நெருக்கடி இருந்தது. சமூக வலைத்தளங்கள் வழியாக இந்த செய்தி பரவி ரிஷப் பண்ட் உதவி செய்தார்.
- Mukesh Kannan
- Updated on: Aug 7, 2025
- 08:15 am IST
India vs England 5th Test: காயத்தால் வெளியேறிய ரிஷப் பண்ட்.. துருவ் ஜூரெல் – ஜெகதீசனுக்கு இடையே கடும் போட்டி! யாருக்கு வாய்ப்பு?
Rishabh Pant Injury: ரிஷப் பண்ட் காயத்தால் ஐந்தாவது இங்கிலாந்து டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2022ல் லிஸ்ட் A போட்டியில் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்த ஜெகதீசன், 52 முதல் தர போட்டிகளில் 3373 ரன்கள் எடுத்த அனுபவம் கொண்டவர். இருப்பினும், துருவ் ஜூரெலுக்கும் வாய்ப்புள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Jul 29, 2025
- 11:16 am IST
Rishabh Pant Test Record: எலும்பு முறிவுடன் எகிறி அடித்த ரிஷப் பண்ட்.. குவிந்த எக்கச்சக்க சாதனைகள்..!
Rishabh Pant's Injury and Extraordinary Batting: ரிஷப் பண்ட் மான்செஸ்டர் டெஸ்டில் காயத்துடன் போராடி அரைசதம் அடித்து அசத்தினார். பந்து ஷூவில் பட்டதால் காயமடைந்த அவர், நொண்டியடித்தவாறு 54 ரன்கள் எடுத்தார். இது வெளிநாட்டு மண்ணில் அவரது 9வது 50+ ஸ்கோர். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.
- Mukesh Kannan
- Updated on: Jul 24, 2025
- 20:54 pm IST
Rishabh Pant: அபாயத்தில் விராட் கோலி ரெக்கார்ட்.. விரட்டி பிடிப்பாரா ரிஷப் பண்ட்..? காத்திருக்கும் 2வது டெஸ்ட்!
India vs England 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விராட் கோலியின் ரன் சாதனையை முறியடிக்க முயற்சிக்க உள்ளார். கோலி 231 ரன்கள் எடுத்திருக்க, பண்ட் 203 ரன்களுடன் 28 ரன்கள் பின்தங்கியுள்ளார். முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த பண்ட், இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். இந்திய அணி முதல் டெஸ்டை தோற்றிருப்பதால், இரண்டாவது டெஸ்ட் மிகவும் முக்கியமானது.
- Mukesh Kannan
- Updated on: Jul 1, 2025
- 10:15 am IST
Rishabh Pant Backflip: பேக் ஃப்ளிப் அடிப்பது தேவையற்றது.. ரிஷப் பண்ட்க்கு ஆபரேஷன் செய்த மருத்துவர் கருத்து!
Rishabh Pant's Miraculous Recovery: ரிஷப் பண்டின் அதிர்ச்சி விபத்து மற்றும் அவரது அசாதாரண மீட்சி பற்றி டாக்டர் டின்ஷா பர்திவாலா விளக்கியுள்ளார். விபத்தின் தீவிரம், பண்ட் கேட்ட முதல் கேள்வி, அவரது மீட்புக்கான பயணம் மற்றும் பேக் ஃப்ளிப் கொண்டாட்டம் குறித்த கவலைகள் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பண்டின் தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு அவரது வெற்றிக்கு காரணம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: Jun 30, 2025
- 09:43 am IST
Rishabh Pant Century: SENA நாடுகளில் 6 டெஸ்ட் சதம்.. அனைத்திலும் இந்திய அணி தோல்வி.. ரிஷப் பண்டை துரத்தும் துயரம்!
IND vs ENG 1st Test: ரிஷப் பண்ட் SENA நாடுகளில் ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த போதிலும், இந்தியா ஒரு போட்டியில்கூட வெல்லவில்லை. இந்தத் தோல்விகள் இந்திய கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சாதனைப் பங்களிப்பு இருந்தும் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இந்த அதிர்ச்சி தரும் தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Jun 25, 2025
- 12:29 pm IST
Rishabh Pant: அம்பயரின் முடிவுக்கு ஆட்சேபணை.. ரிஷப் பண்டிற்கு ஐசிசி கடும் எச்சரிக்கை..!
IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் இரண்டு சதங்கள் அடித்தாலும், ஐசிசி விதி மீறலுக்காக எச்சரிக்கை பெற்றுள்ளார். லீட்ஸ் டெஸ்டின் மூன்றாம் நாளில், அம்பயரின் பந்து சோதனைக்குப் பிறகு, பந்தை தரையில் வீசியதற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலை 1 குற்றமாகக் கண்டறியப்பட்டு, ஒரு டெமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டது. மீண்டும் இத்தகைய தவறு செய்தால் போட்டித் தடை விதிக்கப்படலாம்.
- Mukesh Kannan
- Updated on: Jun 24, 2025
- 15:42 pm IST