Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Rishabh Pant

Rishabh Pant

இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் ரிஷப் பண்ட். இவர் 04 அக்டோபர் 1997ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருகாடியில் பிறந்தார். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ரிஷப் பண்ட், அதன்பிறகு அம்மாவுடன் உத்தரகண்டில் இருந்து டெல்லிக்காக பயிற்சிக்கு வந்தார். டெல்லி வந்த ரிஷப் பண்ட் சோனெட் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். முதன்முறையாக டெல்லி வந்தபோது, ரிஷப் பண்ட் தனது தாயுடன் தங்க இடம் இல்லாமல் குருத்வாராவில் உள்ள் சாலையில் இரவை கழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது ஆரம்ப கல்வி மற்றும் கிரிக்கெட்டை டெல்லியிலேயே கற்று, விரைவில் அண்டர் – 19 இந்திய அணியில் இடம் பிடித்தார். 2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், அந்த போட்டியில் 3 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் அவுட்டானார். அதற்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பண்ட் தொடர்ந்து நல்ல இன்னிங்ஸை விளையாடி, இன்று பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்

Read More

Rishabh Pant: அம்பயரின் முடிவுக்கு ஆட்சேபணை.. ரிஷப் பண்டிற்கு ஐசிசி கடும் எச்சரிக்கை..!

IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் இரண்டு சதங்கள் அடித்தாலும், ஐசிசி விதி மீறலுக்காக எச்சரிக்கை பெற்றுள்ளார். லீட்ஸ் டெஸ்டின் மூன்றாம் நாளில், அம்பயரின் பந்து சோதனைக்குப் பிறகு, பந்தை தரையில் வீசியதற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலை 1 குற்றமாகக் கண்டறியப்பட்டு, ஒரு டெமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டது. மீண்டும் இத்தகைய தவறு செய்தால் போட்டித் தடை விதிக்கப்படலாம்.

இங்கிலாந்து எதிராக மீண்டும் ரிஷப் பண்ட் சதம்.. பேக்ஃபிளிப் அடிக்க சொன்ன சுனில் கவாஸ்கர்..!

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட், 2வது இன்னிங்ஸில் வெறும்130 பந்துகளில் சதம் அடித்தார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீரின் பந்துவீச்சில் ஒரு சிங்கிள் எடுத்து பண்ட் தனது சதத்தை நிறைவு செய்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்டை பேக்ஃபிளிப் செய்யச் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rishabh Pant Century Record: 93 ஆண்டுகளில் முதல் முறை! இந்திய அணிக்காக சிறப்பு சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

IND vs ENG 1st Test: லீட்ஸில் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்டில், ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து வரலாறு படைத்தார். இது இந்திய விக்கெட் கீப்பர்களின் வரலாற்றில் முதல் முறை. முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் எடுத்தார். இது அவருடைய 8வது டெஸ்ட் சதம். இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.